படிக்காத பாவத்தை போக்க பள்ளியில் 'ஆத்தா' படும்பாடு

படிக்காத பாவத்தை போக்க பள்ளியில் 'ஆத்தா' படும்பாடு

4 mins read
27691ce8-e563-46ee-a81f-8ad21b9aa16b
-
multi-img1 of 2

மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் திருமங்­க­லம் என்ற கிரா­மத்­தில் செயல்­படும் அரசு மேல்­நி­லைப் பள்ளி­யில் படிக்­கும் கிட்­டத்­தட்ட 800 மாண­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அந்த 60 வயது மாதை ஆத்தா, ஆத்தா என்­று­தான் செல்ல­மாக அழைக்­கி­றார்­கள்.

திரு­மங்­க­லத்­துக்கு அருகே இருக்­கும் நத்­தம் என்ற கிரா­மத்தைச் சேர்ந்த பானு­மதி என்ற அந்த மாது கண­வனை இழந்­த­வர்.

மூன்று ஆண் பிள்­ளை­க­ளைப் பெற்­றா­லும் அந்­தப் பிள்­ளை­கள் திரு­ம­ணம் செய்­து­கொண்டு தங்­கள் மனைவி ஊர் பக்­கம் போய் வசிக்­கத் தொடங்­கி­விட்­டார்­கள்.

சிறிய வீட்­டில் பானு­மதி மட்­டும் தனி­மை­யில் வாடு­கி­றார். உறவு, ஒத்­து­ழைப்­புக்கு யாரும் இல்­லாத நிலை­யில் உழைத்து வாழ வேண்­டும் என்ற கட்­டா­யம்.

"கூலி வேலை செய்து பிழைக்­கலாம் என்­றால் என்­னு­ட­லில் போதிய தெம்பு இல்லை.

"ஆகை­யால், பேருந்­தில் மயிலாடு­துறை அல்­லது சீர்­காழி வரை சென்று சீடை, முறுக்கு, ரொட்டி, கட­லை­மிட்­டாய் போன்ற தின்­பண்டங்­க­ளை­யும் பென்­சில், பேனா, ரப்­பர் போன்ற பொருள்­களை­யும் வாங்கி வந்து திரு­மங்­கலம் பள்­ளிக்­கூட நுழை­வா­யி­லில் மாண­வர்­க­ளுக்கு விற்று பிழைக்­கி­றேன்," என்­கி­றார் பானு­மதி.

"ரூ.500 கொடுத்து பொருள்­களை, பண்­டங்­களை வாங்கி வரு­வேன். நாள் ஒன்­றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை எனக்­குக் கிடைக்­கும்.

"சனி, ஞாயிறு நாள்­களில், பள்ளி விடு­முறை நாள்­களில், கோடை விடு­முறை நாள்­களில் வீட்­டி­லேயே முடங்­கிக்­கி­டப்­பேன்.

"இப்­ப­டி­யா­கத்­தான் நான் வாழ்­கி­றேன்," என்று கூறிய பானு­மதி, அப்­போ­தைக்கு அப்­போது அங்­கு­மிங்­கும் திரும்­பிப் பார்த்­தார்.

அது பற்றி கேட்­ட­போது, "பள்ளிக்­கூ­டத்­தின் உள்ளே நான் செல்­லக்­கூ­டாது. வாச­லுக்கு வெளியே கம்­பிக் கதவு ஓர­மா­கத்­தான் வெளி­யில் இருந்து பொருள்­களை விற்க முடி­யும்.

"மாண­வர்­க­ளுக்கு முற்­ப­கல் 11 மணி முதல் 11.30 வரை இடை­வேளை. பிறகு 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு நேரம். அந்த நேரங்­களில்­தான் நான் விற்க முடி­யும். பொது­வாக இடை­வேளை நேரத்­தில் மாண­வர்­கள் வெளியே வரக்­கூ­டாது. ஆனால் அவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது இலே­சான காரியம் அல்ல.

"சில நேரங்­களில் என்­னிடம் பொருள் வாங்­கு­வ­தற்­காக மாண­வர்­கள் ஆர்­வத்­து­டன் வெளியே ஓடி வந்­து­வி­டு­வார்­கள். இத­னால் ஆசி­ரி­யர்­க­ளி­டத்­தில் நான் திட்டு வாங்க வேண்­டும்.

"அத­னால் அப்­போ­தைக்கு அப்­போது நிமிர்ந்து பார்த்து பள்­ளிக்­கூட நுழை­வா­யில் கதவு மூடி இருக்­கிறது என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வேன்.

"இரண்டு ரூபாய்க்கு மிட்­டாய், ஐந்து முறுக்கு இருக்­கும் பொட்­ட­லம் ஐந்து ரூபாய். ரப்­பர், பென்­சில், பேனா எல்­லாம் தலா ஐந்து ரூபாய். சில நேரங்­களில் சிறு­மி­க­ளுக்கு ரிப்­பன் நாடா­வும் விற்­கி­றேன்," என்று கூறும் பானு­மதி, காலை­யில் 10 மணிக்கு எல்லா பொருள்­களை யும் தலை­யில் சுமந்­து­கொண்டு பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­து­வி­டு­வதா­க­த் தெரிவித்தார்.

"திரு­மங்­க­லம் மேல்­நி­லைப் பள்­ளிக்கு எதிரே, அந்­தப் பள்­ளி­யில் வேலை செய்­யும் ஓர் ஆசி­ரிய­ரின் வீடு இருக்­கிறது. அவ­ரின் உத­வி­யு­டன் அந்த வீட்­டில் பொருள்­களை வைத்து நடு­ந­டுவே சிறிது நேரம் ஓய்வு எடுப்­பேன்.

"மதி­யம் 2 மணிக்கு மூட்டை யைக் கட்­டிக்­கொண்டு வீட்டுக்­குப் புறப்­பட்­டு­வி­டு­வேன்," என்று கூறிய பானு­ம­தி­யைப் பார்த்து இப்­படித்­தான் உங்­கள் காலம் ஓடுகிறதா என்று கேட்­டேன்.

"என்­னய்யா செய்­வது? இந்­தப் பிள்­ளை­க­ளைப் போல் நான் சிறுமி யாக இருந்த காலத்­தில் மதிய உணவுடன் இல­வச கல்வி கொடுத்­தார்­கள். ஆனால் பள்­ளிக்­கூ­டம் சென்று நான் படிக்­க­வில்லை. அதை ஒரு பாவ­மாக இப்­போது நான் நினைக்­கி­றேன்.

"அந்­தப் பாவத்தை அன்­றா­டம் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்து போக்கு கி­றேன். படிப்­ப­தற்­காக அல்ல. என் வயிற்­றுப் பிழைப்­புக்­காக.

"பிள்­ளை­கள் படிக்க வேண்­டிய காலத்­தில் படித்­துக்­கொள்ள வேண்டும். படிப்பைக் கிள்­ளுக்­கீரை­யா­கக் கரு­த­வே கூடாது," என்று பானு­மதி என்­னி­டம் கூறி­ய­போது பள்­ளிக்­கூ­டம் உள்ளே இருந்து மூன்று, நான்கு ஆசி­ரி­யர்­கள் வெளியே ஓடி வந்­தார்­கள்.

எட்­டாம் வகுப்பு படிக்­கும் மாண­வர்­கள் சிலர் மிட்­டாய் வாங்க வரும் சாக்­கில் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வெளியே ஓடி பக்­கத்­தில் இரு கரை­க­ளை­யும் தொட்­டுக்­கொண்டு தண்­ணீர் ஓடும் வாய்க்­கால் பக்­கம் நிற்­கி­றார்­கள் என்­று அந்­தப் பக்க மாக வந்த ஒரு­வர் கூறி­ய­தைக் கேட்டு ஆசி­ரி­யர்­கள் அந்த மாண­வர்­க­ளைக் கூட்­டி­வர ஓடி­னார்­கள்.

இந்­தச் சம்­ப­வத்­தைப் பார்த்த நான், பானு­மதி ஆத்தா பக்­கம் திரும்­பி­ய­போது, "பார்த்­தீர்­களா அய்யா, இதற்­கும் நான்­தான் பொறுப்­பேற்க வேண்­டும்.

"மிட்­டாய் வாங்­கும் சாக்­கில் அந்த மாண­வர்கள் வெளியே ஓடி­விட்­ட­தாக என்­னைத்தான் ஆசி­ரி­யர்­கள் திட்­டு­வார்­கள்," என்று பரி­தா­ப­மாக ஆத்தா கூறி­னார்.

"பண்­டங்­கள் வாங்­கும் சாக்கில் காசு கொடுக்­கா­மல் ஓடிவிடும் பிள்ளை­கள், கடனுக்கு வாங்கும் பிள்ளை­கள், கை நீளும் பிள்­ளைகள் இருக்­கி­றார்­கள் அய்யா.

"என் பேரப்­பிள்­ளை­கள் போன்று அனு­ச­ரித்துப் போகிறேன். ஆசி­ரி­யர்­களும் கருணையுடன் என்னை அனு­ம­திக்­கி­றார்­கள்.

"'இல்லை என்­றால் கொரோனா காலத்­தில் வீட்டி­லேயே அடைந்து கிடந்து பட்­ட­பாட்டையே தொடர்ந்து நான் பட­வேண்டி இருக்­கும்," என்றார் அந்த மாது.

ஆத்­தாவை நினைத்­த­ப­டியே அவ­ரி­ட­மி­ருந்து விடை­பெற்று புறப்­பட்­ட­போது என் மனதில் என்னுடைய பள்ளிக்கூட காலம் நினைவுக்கு வந்தது. அந்த நினைவுடன் ஆத்தா விடம் ஐந்து ரூபாய் கொடுத்து முறுக்குப் பொட்டலம் வாங்கினேன்.

பொட்டலத்தையும் ஆத்தாவையும் பள்ளிக்கூடத்தையும் பார்த்தபடியே புறப்பட்டேன்.

குறிப்புச் சொற்கள்