இலங்கையை நோக்கிச்செல்லும் சீனாவின் ஆய்வுக் கப்பல்; உற்றுக் கவனிக்கும் இந்தியா

இலங்கையை நோக்கிச்செல்லும் சீனாவின் ஆய்வுக் கப்பல்; உற்றுக் கவனிக்கும் இந்தியா

2 mins read
989434b2-23b4-49fe-ad1e-61b4b9d16337
கடனை அடைக்க முடியாமல் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை இலங்கை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: சீனா­வின் ஆய்­வுக் கப்­பல் ஒன்று இலங்­கையை நோக்­கிச் செல்­ல­வி­ருப்­ப­தால் இந்­தியா தீவி­ரக் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

இலங்­கை­யின் தெற்கே ஹம்­பன்­தோட்­டா­வில் துறை­மு­கத்­தைக் கட்­டி­யி­ருக்­கும் சீனா அதனை குத்­த­கைக்கு எடுத்து நடத்தி வரு­கிறது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2 பி.) மதிப்­பி­லான அந்த துறை­மு­கம், ஆசியா-ஐரோப்­பா­வின் முக்­கிய கடல் போக்குவ­ரத்­துக்கு அருகே அமைந்­துள்­ளது. இந்த துறை­மு­கத்தை சீனா தனது ராணு­வத் தள­மாகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்­ப­தால் இந்­தியா தனது கவ­லையை பல­முறை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது.

இந்த நிலை­யில் யுவான் வாங்-5 எனும் அந்த ஆய்­வுக் கப்­பல் ஹம்­பன்­தோட்­டாவை நோக்­கிச் செல்­வ­தாக 'ரிஃபினிட்­டிவ் எய்க்­கோன்' புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­ கின்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி அந்­தக் கப்­பல் ஹம்­பன்­தோட்டா துறை­ முகத்தை சென்­ற­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கி நொடித்துப் போ­யி­ருக்­கும் இலங்­கைக்கு அண்டை நாடான இந்­தியா இவ்­வாண்டு மட்டும் நாலரை பில்­லி­யன் அமெரிக்க டால­ருக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கிறது.

கடந்த வியாழக்கிழமை வாராந்திரக் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், சீனக் கப்பலின் திட்டமிட்ட பயணத்தை இந்திய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.

இந்த விவகாரத்தில் இந்தியா, அதன் பொருளியல் மற்றும் பாது காப்பு நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கெண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இலங்கை இதில் கலந்துரையாடும் பங்காளி நாடாக உள்ளது. ஆனால் வருகின்ற மாநாட்டில் அது பங் கேற்குமா என்பது தெரியவில்லை.

சீனக் கப்பலின் பயணம் குறித்து இலங்கை அரசிடம் ஏற்கெனவே இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவும் கப்பல் வருகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சீன வெளி யுறவு அமைச்சும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இலங்கை பொருளியல் பாதை திட்டத்தின் இலங்கை ஆலோசனை நிறுவனம் ஒன்று, ஹம்பன் தோட்டாவில் ஒரு வாரம் இருக்கும் யுவான் வாங்-5 கப்பல் அங்கு இந்திய கடற்பகுதியின் தென் மேற்கில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபடும் என்று தெரிவித்தது.

இலங்கை அரசாங்கம், கடனை அடைக்க முடியாமல் 2017ஆம் ஆண்டில் ஹம்பன்தோட்டா துறை முகத்தை சீன நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைத்தது.