மிக்-21 போர் விமான விபத்தில் இரண்டு விமானிகள் பலி

மிக்-21 போர் விமான விபத்தில் இரண்டு விமானிகள் பலி

1 mins read
1fc085c4-e04a-4d2d-8fe1-c16b8147988b
விமானிகள் அத்வித்திய பால், எம். ராணா(இடம்). படம்: தற்காப்பு அமைச்சு பேச்சாளர் டுவிட்டர் -

புது­டெல்லி: ராஜஸ்­தா­னில் 'மிக்-21' ரக போர் விமா­னம் விபத்­துக்­குள்­ளா­ன­தில் இரண்டு விமா­னி­கள் உயி­ரி­ழந்­த­னர். பார்­மர் மாவட்­டத்­தில் மிக் 21-ரக போர் விமா­னம் வியா­ழக்­கி­ழமை பயிற்­சி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­தது. இரவு 9 மணி­ய­ள­வில் அந்த போர் விமா­னம் திடீ­ரென விமானியின் கட்­டுப்­பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்­பி­டித்து எரியத் தொடங்­கி­யது. விமா­னம் முழு­வ­தும் எரிந்து நாச­மா­ன­தில் இரண்டு விமா­னி­களும் பலி­யா­கி­னர். சம்­பவ இடத்­திற்கு தீய­ணைப்பு படை­யி­னர் அனுப்பப்பட்டனர். தீ விபத்­திற்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடந்து வரு­கிறது.

கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யி­லி­ருந்து மிக்-21 ரக விமா­னம் விபத்­துக்­குள்­ளா­வது இது ஆறா­வது முறை­யா­கும். இது­வரை ஐந்து விமானி­கள் மாண்டனர்.

உள்­ளூர் ஊட­கங்­கள் வெளி­யிட்ட நிழற்­ப­டங்­களில் பெரிய இடத்­தில் விமா­னத்­தின் சிைதந்த பாகங்­கள் சித­றி­யி­ருந்­த­தைக் காண முடிந்­தது. இதற்­கி­டையே விபத்து குறித்து விமா­னப் படை­யி­டம் விவ­ரங்­களைக் கேட்­ட­றிந்த தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், விமா­னி­ க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தனது ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்தார்.