ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீலா சவுகான் கடந்த 33 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார்.
இதையடுத்து பள்ளி ஊழியர்களிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பிய அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அமெரிக்காவில் பணியாற்றும் சுசீலாவின் மகன் யோகேஷ், தன் தாயாரை அவரது கடைசி பணி நாளன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல, ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சுசீலா, பள்ளியில் இருந்து அஜ்மீர் நகருக்கு அருகே உள்ள தமது கிராம வீட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.
அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அவரை வரவேற்றனர். பணியில் இருந்து ஓய்வுபெறும் தாயாருக்கு அவர் என்றும் மறவாத வகையில் தனித்துவமான பரிசை அளிக்க விரும்பியதாக மகன் யோகேஷ் தெரிவித்தார்.

