தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு: ஐந்து கோடி வழக்குகள் தேக்கம்

2 mins read
7aaa0b1d-22f8-45dd-addb-ee1487dac2d4
-

மாவட்ட, கீழ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவை

புதுடெல்லி: இந்­திய நீதி­மன்­றங்­களில் சுமார் ஐந்து கோடி வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தின் மக்­க­ள­வை­யில் நேற்று முன்­தி­னம் இது தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு எழுத்து மூலம் பதில் அளித்­துள்ள மத்­திய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜிஜு, ஜூலை 1ஆம் தேதி நில­வ­ரப்­படி உச்ச நீதி­மன்­றத்­தில் மட்­டும் 72,000 வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாடு முழு­வ­தும் 25 உயர் நீதி­மன்­றங்­கள் செயல்­பட்டு வரும் நிலை­யில், அவற்­றில் தேஙகி உள்ள வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை கடந்த 25ஆம் தேதி நில­வ­ரப்­படி 5,955,873 ஆகும்.

மாவட்ட அள­வி­லான நீதி­மன்­றங்­கள், கீழ் நீதி­மன்­றங்­களில் ஆக அதி­க­மாக 4.23 கோடி வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன. ஆகவே, அனைத்து நீதி­மன்­றங்­க­ளி­லும் உள்ள வழக்­கு­கள் எண்­ணிக்கை 4.83 கோடி வழக்­கு­கள் ஆகும்," என்று சட்ட அமைச்­சர் கிரண் ரிஜிஜு தமது பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.

நிலுவை வழக்­கு­களை முடிப்­பது நீதித்­து­றை­யின் அதி­கார வரம்­புக்கு உட்­பட்­டது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அதில் அர­சுக்கு எந்­த­வித பங்­கும் இல்லை என்று கூறி­யுள்­ளார்.

மேலும், வழக்­கு­களை முடிக்க கால­வ­ரை­யறை எது­வும் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

"வழக்­கு­கள் தேங்­கு­வ­தற்கு நீதி­ப­தி­கள் பற்­றாக்­குறை, வாய்தா உள்­பட பல கார­ணங்­கள் உள்­ளன," என்று அமைச்­சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.

நாடு முழு­வ­தும் குற்­ற­வி­யல் அல்­லாத சிறு வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளன. இதை­ய­டுத்து மத்­திய அரசு, மக்­கள் நீதி­மன்­றம் என்று குறிப்­பி­டப்­படும் லோக் அதா­லத் மூலம் வழக்­கு­களை முடித்து வைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இந்த நீதி­மன்­றங்­கள் ஒரே நாளில் பல ஆயி­ரக்­க­க­ணக்­கான வழக்­கு­களை முடித்து வைக்­கின்­றன. குறிப்­பாக சாலை விபத்­து­கள், நஷ்ட ஈடு தொடர்­பாக நீண்ட நாள்­க­ளாக நிலு­வை­யில் உள்ள வழக்­கு­களில் இரு தரப்­பி­ன­ரி­டம் நேர­டி­யா­கப் பேசி, தீர்வு காணப் ­ப­டு­கிறது.

வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை குறைய வேண்­டு­மெ­னில் காலி­யாக உள்ள நீதி­பதி பணி­யி­டங்­களை நிரப்­பு­வது உள்­ளிட்ட சில ஆலோ­ச­னை­களை உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி அண்­மை­யில் வழங்கி இருந்­தார்.