ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயதுச் சிறுமி ஐந்து மணி நேரத்துக்குப் பின் மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயதுச் சிறுமி ஐந்து மணி நேரத்துக்குப் பின் மீட்பு

1 mins read
7c4a10d6-a3f6-4c70-9de6-27c0ff50f386
-

அக­ம­தா­பாத்: ஆழ்­துளை கிணற்­றில் விழுந்த 12 வய­துச் சிறுமி சுமார் ஐந்து மணி நேரத்­துக்­குப் பின் மீட்­கப்­பட்­டாள். இந்­தப் பணி­யில் ஈடு­பட்ட குஜ­ராத் மாநில தீய­ணைப்பு மீட்­புப் படை­யி­னர், காவல்­து­றை­யி­ன­ருக்­கும் ராணு­வத்­தி­ன­ருக்­கும் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

குஜ­ராத் மாநி­லம், சுரேந்­திர நகர் மாவட்­டத்­தில் உள்­ளது கஜ­நப் கிரா­மம். இங்கு பெற்­றோ­ரு­டன் வசித்து வரு­கி­றாள் சிறுமி மனிஷா.

நேற்று முன்­தி­னம் காலை சுமார் 7.30 மணி­ய­ள­வில் தன் வீட்­டுக்­குப் பக்­கத்­தில் உள்ள தோட்­டத்­துக்கு விளை­யா­டச் சென்ற மனிஷா, எதிர்­பா­ராதவித­மாக அங்கு மூடப்­ப­டா­மல் இருந்த எழு­நூறு அடி ஆழ­முள்ள ஆழ்­து­ளைக் கிணற்­றில் விழுந்­து­விட்­டாள்.

சுமார் அறு­பது அடி ஆழத்­தில் சிக்­கிக்­கொண்ட சிறுமி உதவி கேட்டு, கண்­ணீர் மல்க குர­லெ­ழுப்ப, பெற்­றோ­ரும் அப்­ப­குதி மக்­களும் அவ­ளைத் தேடி­னர்.

பின்­னர் மனிஷா ஆழ்­து­ளைக் கிணற்­றில் விழுந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதிர்ச்சி அடைந்த அவ­ரது பெற்­றோர் கதறி அழ, உட­ன­டி­யாக காவல்­து­றைக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் ராணு­வத்­தி­ன­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

கிணற்­றுக்­குள் சிக்­கிய சிறுமி மனி­ஷா­வின் நிலை கேமரா உத­வி­யு­டன் கண்­கா­ணிக்­கப்­பட்டு மீட்­புப் பணி தொடங்­கி­யது. சிறு­மிக்­குத் தேவை­யான உயிர்­வாயு செலுத்­தப்­பட்­டது.

ஐந்து மணி நேர போராட்­டத்­திற்­குப் பின்பு மனிஷா உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டாள். பின்­னர் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவ­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவள் நல­மாக இருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனிஷாவின் பெற்றோர் நன்றி கூறினர்.