தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மம்தா அமைச்சரவை விரிவாக்கம்; 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

2 mins read
2b1b2454-abd6-49c4-84ba-76df9fca769f
மேற்கு வங்க மாநிலத்தில் புதிய அமைச்சர்களின் பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் இல.கணேசன், முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்றது. படம்: ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில், முத­ல்வர் மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. இந்த மாநி­லத்­தின் தொழில் துறை அமைச்­ச­ராக இருந்த பார்த்தா சட்­டர்­ஜியை, ஆசி­ரி­யர் நிய­மன முறை­கேடு வழக்­கில் கடந்த மாதம் அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

மேற்கு வங்க அமைச்­ச­ராக இருந்த பார்த்தா சட்­டர்­ஜிக்கு நெருக்­க­மான நடிகை அர்­பிதா முகர்ஜி வீடு­களில் அம­லாக்­கத் துறை­யி­னர் கடந்த வாரம் நடத்­திய சோத­னை­யில் ரூ.50 கோடி பணம், நகை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இதை­ய­டுத்து, பார்த்தா சட்­டர்ஜி மற்­றும் அர்­பிதா ஆகிய இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். இதை­யடுத்து, பார்த்தா சட்­டர்­ஜியை அமைச்­சர் பத­வி­யில் இருந்­தும் கட்­சி­யில் இருந்­தும் உட­ன­டி­யாக நீக்­கி­னார் மம்தா பானர்ஜி.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக அமைச்­ச­ர­வை­யில் மாற்­றம் செய்­யப்­ப­டாத நிலை­யில், முதன்முறை­யாக நேற்று முன்­தி­னம் அமைச்­ச­ர­வை­யில் மாற்­றம் செய்து விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டு ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

புதி­தாக அமைச்­ச­ராகப் பத­வி­யேற்­ற­வர்­களில் பாஜ­க­வின் முன்­னாள் மத்­திய அமைச்­சர் பபுல் சுப்­ரியோ முக்­கி­ய­மா­ன­வர்.

கடந்த ஆண்டு பாஜ­க­வில் இருந்து விலகி திரி­ண­மூல் காங்­கி­ர­சில் சேர்ந்த முன்­னாள் மத்­திய அமைச்­சர் பபுல் சுப்­ரி­யோ­வுக்கு முழு அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஸ்னே­கா­ஷிஷ் சக்­க­ர­வர்த்தி, பார்த்தா பவு­மிக், உத­யன் குஹா மற்­றும் பிர­திப் மஜும்­தார் ஆகி­யோ­ரும் முழு அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்­ற­னர்.

இது­த­விர, பிர்­பஹா ஹன்ஸ்தா, விப்­லவ் ராய் சௌத்ரி, தாஜ்­முல் ஹுசைன் மற்­றும் சத்­ய­ஜித் பர்­மன் ஆகி­யோர் இணை அமைச்­சர்­களாகப் பத­வி­யேற்­ற­னர். முன்­ன­தாக, கடந்த திங்­கள்­கி­ழமை கட்­சி­யின் 16 மாவட்­டச் செய­லா­ளர்­களை மாற்றி முதல்­வர் மம்தா உத்­த­ர­விட்­டார். அத்­து­டன் மாநி­லத்­தில், புதி­தாக ஏழு மாவட்­டங்­கள் உரு­வாக்­கப்­படும் என்­றும் அவர் அறி­வித்­தார்.

இதன்­மூ­லம் மேற்கு வங்க மாநி­லத்­தில் மொத்த மாவட்­டங்­கள் எண்­ணிக்கை 30ஆக அதி­க­ரிக்­கும். புதிய மாவட்­டங்­கள் உரு­வாக்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி­அ­ளித்­துள்­ள­தாக முதல்­வர் மம்தா ஆகஸ்ட் 1ஆம் தேதி அறி­வித்­தார்.

அந்­தப் புதிய மாவட்­டங்­கள் சுந்­தர்­பன், இச்­சா­மதி, ரனாகாட், பிஷ்­னா­பூர், ஜாங்­கி­பூர், பெர்­ஹம்­பூர் மற்­றும் பசிர்­ஹாட்­டில் ஒரு மாவட்­ட­மும் அடங்­கும்.

இதுகுறித்து அதி­கா­ர­பூர்­வ­மாக விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.