தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை: 10 வயது சிறுவனுக்கு காவல்துறை வலைவீச்சு

1 mins read
39b5fef9-e4dc-47e3-83e6-d6979af315f7
-

பாட்­டி­யாலா: பணம் அளிக்­கும் முகப்புக்கு அருகே ஏடி­எம்­மில் நிரப்புவதற்காக வைக்­கப்­பட்­டி­ருந்த ரூ.35 லட்­சம் பணம் இருந்த பையை, பத்து வயது மதிக்­கத்­தக்க சிறு­வன் ஒரு­வன் எடுத்­துக் கொண்டு அமை­தி­யாக வெளி­யேறு­வது கண்­கா­ணிப்­புக் கரு­வி­யில் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் சண்­டி­க­ரில் பாட்­டி­யாலா பகு­தி­யில் உள்ள எஸ்­பிஐ வங்­கி­யில் நடந்­தது. இந்த திருட்­டுச் சம்­ப­வம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்­தை­யும் அதி­கா­ரி­க­ளுக்கு அதிர்ச்­சி­யை­யும் கொடுத்­தி­ருக்­கிறது. அந்­தச் சிறு­வன், வேறொருவருடன் வங்­கிக்­குள் நுழை­வ­தும், அவர்­கள் சுமார் 20 நிமி­டம் வங்­கி­யின் நட­வ­டிக்­கை­களை நோட்­ட­மி­டு­வ­தும் சிசிடிவியில் பதி­வா­கி­யுள்­ளது. விசா­ரணை நடத்திவரும் காவல்­து­றை­யி­னர், அந்­தப் பையை வங்­கி­யில் பாது­கா­வ­ல­ராக இருந்­த­வர் கீழே வைத்­து­விட்டு அறையை பூட்­டு­வ­தற்­குள் சிறு­வன் திரு­டிச் சென்­ற­தாக ஊழி­யர்­கள் அளித்த தக­வ­லைத் தொடர்ந்து தேடு­தல் பணியை துரி­தப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.