தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுல்: நிதியமைச்சருக்கு மக்களின் வேதனை தெரியவில்லை

1 mins read
2b0e158d-2590-44e4-b879-1c3eecb0dd37
-

புது­டெல்லி: முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தை­யும் மீறி, டெல்­லி­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் நேற்று முன்­தி­னம் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

விலை­வாசி உயர்வு, வேலை­யில்­லாத் திண்­டாட்­டம், காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யி­டம் அம­லாக்­கத்­துறை நடத்தி வரும் விசா­ரணை ஆகி­ய­வற்­றைக் கண்­டித்து இந்­தப் போராட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ராகுல்­காந்தி எம்பி, நாடு முழு­வ­தும் வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் தலை­வி­ரித்து ஆடு­கிறது என்­றும் அனைத்­துப் பொருள்களின் விலை­யும் கடு­மை­யாக உயர்ந்­து­விட்­டது என்­றும் குற்­றம்­சாட்­டி­னார்.

மக்­கள் படும் வேதனை குறித்து மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு ஒன்­றும் தெரி­ய­வில்லை என்­றும் இந்­திய பொரு­ளி­யல் குறித்து அமைச்­ச­ருக்கு எந்­த­வி­தப் புரி­த­லும் இல்லை என்றும் விமர்­சித்­தார் ராகுல்.

"நிதி அமைச்­சர் வெறும் ஊது­கு­ழ­லாக மட்­டுமே செயல்­ப­டு­கி­றார். ஹிட்­ல­ரும்­கூட அனைத்து தேர்­தல்­க­ளி­லும் வெற்றி பெற்­ற­வர்­தான். எனி­னும், அவர் எவ்­வாறு வெற்றி பெற்­றார் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும்.

"நாட்­டில் உள்ள அனைத்து அமைப்­பு­க­ளை­யும் எங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கட்­டும். தேர்­த­லில் எப்­படி வெல்­கி­றார்­கள் என்­ப­தைக் காண்­பிக்­கி­றேன்," என்­றார் ராகுல்.

முன்­ன­தாக, பிர­த­மர் மோடி வீட்டை முற்­று­கை­யிட முயன்ற காங்­கி­ர­சார் காவல்­து­றை­யி­ன­ரால் குண்­டுக்­கட்­டாக அப்­பு­ற­டுத்­தப்­பட்­ட­னர்.