நாடு முழுவதும் 150,000 சுகாதார மையங்கள்: அமைச்சர் தகவல்

2 mins read
a104b4fb-c257-4729-a4d9-77f90ed0ade9
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் பர­வ­லாக சுமார் 150,000 ஆயுஷ்­மான் சுகா­தார மையங்­கள் அமைக்கப்படும் என மத்­திய சுகா­தார அமைச்சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் டிசம்­பர் மாதத்­துக்­குள் இந்­தச் சுகா­தார மையங்­கள் செயல்­பாட்­டுக்கு வரும் என்று மாநிலங்­க­ள­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மாநி­லங்­க­ள­வை­யில் 'சுகா­தார உரிமை மசோதா 2021' என்ற தனி­நபர் மசோதா மீது நடை­பெற்ற விவா­தத்­தின்­போது அமைச்­சர் இத்­த­க­வலை வெளி­யிட்­டார்.

"ஆயுஷ்­மான் பாரத் என்ற திட்­டத்­தின் கீழ் நாடு முழு­வ­தும் 150,000 சுகா­தார மையங்­களை நிறுவ இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் இப்­போது 122,000 மையங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

"எதிர்­வ­ரும் டிசம்­பர் மாதத்­துக்­குள் நிர்­ண­யித்த இலக்­கின்­படி அனைத்து மையங்­களும் செயல்­பாட்­டுக்கு வரும்," என்­றார் அமைச்சர் மன்­சுக் மாண்­ட­வியா.

இப்­பு­திய சுகா­தார மையங்­களில் மார்­பக, வாய் உள்­ளிட்ட மூன்று வகை புற்­று­நோய்­கள், 13 தொற்றா நோய்­க­ளுக்­கான பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று குறிப்­பிட்ட அவர், சுகா­தார கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­த­வும் ஏழை­களுக்­கும் சுகா­தார வசதி எளி­தாக கிடைப்­பதை உறுதி செய்­ய­வும் மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்கை­களை எடுத்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

ஆயுஷ்­மான் சுகா­தார மையங்­களில் உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோய் ஆகி­ய­வற்­றுக்­கும் இல­வ­ச­மாக பரி­சோ­த­னை­கள் செய்­யப்­படும். தமி­ழ­கத்­தில் இந்த மையங்­கள் மூலம் கடந்த மார்ச் மாத இறுதி ­வரை 542,070 பரி­சோதனை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மத்திய அரசின் சார்பில் தேசிய சுகா­தார இயக்­கத்­தின் கீழ் தமிழகத்­திற்கு ரூ. 2,600 கோடி­யும் சுகா­தார மையங்­க­ளுக்­கான உள் கட்­ட­மைப்­புக்கு ரூ.404 கோடி­யும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.