ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த 75 வயது முன்னாள் ராணுவ வீரைன் 70 வயது மனைவி, திருமணமாகி 54 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகக் குழந்தை பெற்றுக்கொண்டார். கோபி சிங் - சந்திரதேவி என்ற இந்தத் தம்பதியர் குழந்தையின்மைக்காகப் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் தங்கள் உறவினர் ஒருவர் மூலம் ஆல்வாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்க திருவாட்டி சந்திரதேவிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் சற்று அஞ்சினாலும் குழந்தை வேண்டும் என்ற ஆசையால், ஆரோக்கியமாக ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் இம்மூதாட்டி.
70 வயதில் ஆண் குழந்தை பெற்று வியக்கவைத்த மூதாட்டி
1 mins read
-


