புளியமரத்து சேவலும் புரியா புதிரும்

புளியமரத்து சேவலும் புரியா புதிரும்

5 mins read
834391a6-de00-462a-aeb6-2aca48e8ba5a
கட்டளைச்சேரி என்ற கிராமத்தில் வயல்களுக்கு நடுவே புகுந்து செல்லும் ஒரு சாலை திருப்பத்தில் வழிபாட்டு இடம் ஒன்றில் ருத்ராட்ச மாலையுடன் குறிசொல்லும் மகேந்திரன். கிராமத் தலைவர் ஜி. டி. பாண்டியராஜ், அதோ பாருங்கள் என்று ஒரு கோயிலைக் காட்டுகிறார். அந்தக் கோயில் பார்வைக்கு எட்டவில்லை. -
multi-img1 of 4

செய்தி &

படங்கள்:

எம். கே. ருஷ்யேந்திரன்

"எனக்கே விளங்­க­வில்லை; எப்­படித்­தான் சொல்­கி­றேனோ எனக்கே தெரி­ய­வில்லை," என்­கி­றார், சன்­னி­யாசியாக வாழும் ஒரு சம்­சா­ரி.

­மகேந்­தி­ரன் என்ற அந்த 43 வயது ஆட­வரை கட்­ட­ளைச்­சேரி என்ற கிரா­ம­வா­சி­களும் அந்த வட்­டா­ர­வா­சி­களும் 'குறி சொல்­லும் சாமி­' என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

சுற்­றி­லும் பச்­சை­ப்ப­சேல் வயல்­களுக்கு நடுவே செல்­லும் ஒரு தார்ச் சாலை­யின் வளைவு ஒன்­றில் வழி­பாட்டு இடம்­போல காட்சி அளிக்­கும் ஓர் இடத்­தில் செவ்­வாய், வெள்ளி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் அவரைப் பார்க்­க­லாம்.

திருட்­டுப்போன பொருளைக் கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று, குடும்­பப் பிரச்­சி­னை தீர வேண்டும் என்று, எந்­தத் திசை­யில் தங்களுக்கு வள­மான வாழ்க்கை இருக்­கிறது என்று தெரிந்­து­கொள்ள விரும்­பும் பல­ரும் அந்­தக் கிழமைகளில் அவ­ரைப் பார்க்க வரு­கிறார்­களாம்.

"அப்­படி வரு­வோரை கையைப் பார்த்து, அவர்­கள் கொண்டு வரும் ஏதா­வது ஆவ­ணங்­களை வைத்து அல்­லது அவர்­க­ளி­டம் விவ­ரம் கேட்டு அவற்­றின் அடிப்­ப­டை­யில் மகேந்­தி­ரன் பல பிரச்­சி­னை­களுக்கும் தீர்வு கூறு­கி­றார்.

"அவற்­றில் கிட்­டத்­தட்ட எல்­லாம் பலிக்­கின்­றன,'' என்று கட்­டளைச் சேரி கிரா­மத் தலை­வ­ரான ஜே. டி. பாண்­டி­ய­ராஜ் கூறு­கி­றார்.

"இந்­தச் சாலை வளை­வில் இருந்து சுமார் அரை கிலோ­மீட்­டர் தொலை­வில் வயல்­க­ளுக்கு நடுவே இருக்­கும் ஐய­னார் கோயில்­தான் எங்­க­ளுக்கு கண்­கண்ட தெய்­வம்.

"என்­னு­டைய தாத்தா, பிறகு என்­ தந்தை சீமான், அவ­ருக்­குப் பிறகு நான் என்று ஒரு­வர் பின் ஒரு­வ­ராக, தலை­முறை தலை­மு­றை­யாக ஐய­னா­ரின் அரு­ளுக்கு பாத்­தி­ய­தை­யாகி வரு­கி­றோம்.

"நான் ருத்­ராட்ச மாலையை அணிந்து­கொண்டு இங்கு வந்து அமர்ந்­து­விட்­டால் என்­னையே மறந்து விடு­கி­றேன். ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்­கொண்­ட­தைப் போல நான் உணர்­கி­றேன்.

"அப்­போது யார் என்­னி­டம் எதைக் கேட்­டா­லும் நான் தக்க பதில் சொல்­கி­றேன். ஆனால் நான் என்ன சொன்­னேன் என்­பது பிறகு எனக்கே நினை­வி­ருக்­காது," என்­கி­றார் குறி சொல்­லும் மகேந்­தி­ரன்.

திரு மகேந்­தி­ரன் திரு­ம­ணம் ஆன­வர். 22 வய­தில் ஒரு மகன். அவர் வெளி­நாட்­டுக்கு வேலைக்குப் போய்­விட்­டார். மூன்று ஆண்டு­ களுக்கு முன் தன்­ தந்தை மர­ணம் அடைந்­த­தற்குப் பிறகு அவ­ரி­டம் இருந்து ஐய­னார் அருள் தனக்கு வந்­து­விட்­ட­தா­க­வும் அது முதல் சுத்­தமாக தான் மாறி­விட்­ட­தா­க­வும் கூறு­கிறார் மகேந்­தி­ரன்.

மனை­வி­யு­டன் குடும்ப வாழ்க்கை நடத்­தி­னா­லும் இல்­லற வாழ்­வில் இப்­போ­தெல்­லாம் ஈடு­ப­டு­வதே இல்லை என்­றும் சுத்த சைவ­மாக மாறி­விட்­ட­தா­க­வும் கூறும் மகேந் திரன், அப்­போ­தைக்கு அப்­போது தனக்கு அருகே உள்ள ஐய­னார் சிலை­யைப் பார்த்­துக்­கொள்­கி­றார்.

இத­னி­டையே, உள்­ள­ப­டியே மகேந்­தி­ரனை ஏதோ ஒரு சக்தி வழிநடத்­து­கிறது என்று கூறிய கிரா­மத் தலை­வர் பாண்­டி­ய­ராஜ், ஒரு நடை­மு­றையை விளக்­கி­னார்.

"அதா­வது, மகேந்­தி­ர­னி­டம் குறி பார்க்க வரு­ப­வர்­கள் காணிக்­கை­யாக பணம் கொடுப்­பார்­கள், அல்லது ஐய­னா­ருக்கு காணிக்­கை­யாக சேவலைக் கொடுப்­பார்­கள்.

"மகேந்­தி­ரன், அதோ தெரி­யும் ஐய­னார் கோயி­லுக்­குச் சென்று அந்­தச் சேவலை அங்கு விட்­டு­விட்டு வந்து­வி­டு­வார். சேவலுக்கு ஐந்து நாள்களுக்குத் தேவையான உணவையும் அங்கு வைத்துவிட்டு வருவார்.

"ஐந்து நாள்­களுக்­குப் பிறகு­தான் அந்தக் கோயிலுக்குச் சேவ லைத் தேடி அவர் செல்ல வேண்டும் என்­பது ஐயனார் கட்டுப்­பாடு.

"சேவல் உயிரோடு இருந்­தால் அது மகேந்திரனுக்குச் சொந்­தம். அதை அவ­ரு­டைய குடும்­பத்­தி­னர் சமைத்து சாப்­பிடுவார்கள். அவர் தொடமாட்­டார். ஆனால் அந்தச் சேவல் அவர் குடும்­பத்­துக்கும் பெரும்­பா­லும் கிடைக்­காது.

"சேவ­லைத் தின்­ப­தற்­காக நாய்கள், நரி­கள், நல்­ல­பாம்பு எல்லாம் ஐய­னார் கோயி­லைச் சுற்றி சுற்றி வரும். அவற்­றுக்­குப் பயந்து கொண்டு எப்­போ­துமே அங்கு உள்ள ஒரு புளி­ய­ம­ரத்­தின் உச்சியில் சேவல் உட்­கார்ந்­து­கொள்­ளும்.

"அர­வ­மில்­லாத நேரத்­தில் கீழே வந்து சாப்­பிட்­டு­விட்டு மேலே ஏறிக்­கொள்­ளும். எவ்­வ­ளவு தந்­தி­ர­மாக நடந்­து­கொண்­டா­லும் கடை­சி­யில் சேவல் தோற்­றுத்­தான்­ போ­கும்.

"எப்­ப­டியோ அது நாய்க்கோ பாம்­புக்கோ நரிக்கோ இரை­யா­கி­வி­டும். ஐந்து நாள் கழித்து போய் வரும்போது மகேந்­தி­ரன் வெறும் கையோடு­தான் திரும்­பு­வார்," என்று கிரா­மத் தலை­வர் விளக்­கி­னார்.

ஐய­னார் கோயி­லுக்­குப் போக முயற்­சி செய்­தேன். அதற்­குப் பாதை கிடை­யாது. அக­லம் குறைந்த வரப்பு ஒன்­றின் வழி­யாக அரை கி.மீ. நடந்து செல்ல வேண்­டும்.

"ஊர் மக்கள், பெண்கள் யாரும் அங்கு செல்வது கிடையாது. எப்போ தாவது படையல் போடும்போது மட்டும் ஆண்கள் சிலர் செல்வது உண்டு. அதுவும் சிரமம் என்று பலரும் வரமாட்டார்கள்.

"உங்­களால் செல்ல முடி­யாது," என்று அந்த ஊர் பெரி­ய­வரே என்­னி­டம் கூறி­விட்­டார். ஆகை­யால், நான் அங்கு செல்­ல­வில்லை.

"குறி சொல்­வது என்­பது ஒரு கலை. அதை நம்­பு­வோரும் இருக்­கி­றார்­கள் நம்­பா­த­வர்­களும் இருக்­கி­றார்­கள். எங்­கள் ஊர் மகேந்­திரனைப் பொறுத்­த­வரை, அவர் எப்படி சரியாகச் சொல்கிறார் என்பது எங்­களுக்­கும் புரி­யாத புதி­ரா­கத்­தான் இருக்­கிறது," என்று திரு பாண்­டி­ய­ராஜ் கூறி­ய­தைக் கேட்ட மகேந்­தி­ரன் தானும் அதை ஆமோ­திப்­பதாக தலை­யாட்­டி­னார்.

நீங்­கள் குறி சொன்ன ஒரு சில சம்­ப­வங்­க­ளைச் சொல்­லுங்­கள் என்று மகேந்­தி­ர­னி­டம் கேட்­டேன்.

"பக்­கத்­தில் உள்ள பொன்­னூர் என்ற கிரா­மத்­தில் ஒரு மோதி­ரம் திருட்­டுப் போய்­விட்­டது. அதற்­குத் தீர்வு சொல்­லும்­படி சிலர் வந்து என்­னி­டம் கேட்­ட­னர். ஐய­னார் என்னை ஆக்­கி­ர­மித்த நிலை­யில் நான் குறி சொன்­னேன்.

"சில நாள்­க­ளுக்­குப் பிறகு திரும்பி வந்த அந்­தக் குடும்­பத்­தினர், மோதி­ரம் கிடைத்­து­விட்­டது என்­றும் நான் கூறி­ய­ப­டியே ஐந்து பேரைக் கண்­கா­ணித்து அவர்­களில் திரு­ட­னான ஐந்­தா­வது நப­ரைப் பிடித்­து­விட்­ட­தா­க­வும் என்­னி­டம் கூறி­னார்­கள்.

"பில்லி சூனி­யம் போன்ற வேலைக்­கெல்­லாம் நான் போக­வே­மாட்­டேன். என் சக்தி எல்­லாமே ஆக்­க­க­ர­மான செயல்­க­ளுக்கே.

"உலக உயிரினங்கள் எல்­லாம் வாழவே விரும்புகின்றன. ஆகை யால், எல்லா உயிர்­களும் கூடு­மா­ன­வரை அதிக நாள் வாழ உத­வ­வேண்­டும்.

"உங்களின் ஒவ்­வொரு செயலை­யும் ஒரு­வர்-என்னைப் பொறுத்­த­வரை என் ஐய­னார்- கண்கா­ணிக்­கி­றார். நல்­லதோ கெட்டதோ நீங்கள் செய்­யும் காரி­யத்­தில் இருந்து நீங்கள் தப்ப முடி­யாது," என்று மகேந்­தி­ரன் கூறி­ய­தைக் கேட்­ட­படி அவ­ரி­ட­மும் கிரா­மத் தலை­வ­ரி­டமும் விடை­பெற்று புறப்பட்டேன்.

அப்­போது, இது­வரை குறி கேட்டி­ராத எனக்கு, மகேந்­தி­ர­னிடம் ஏதா­வது கேட்டுப் பார்ப்­போமா என்ற எண்ணம் உதித்­தது.

யார் யாருக்கோ குறி சொல் கிறாரே மகேந்­தி­ரன், அவர் அடுத்த தாக ஐயனார் கோயி­லில் கொண்டு விட இருக்கும் சேவலின் கதி ஐந்து நாள்­களுக்­குப் பிறகு என்ன ஆகும் என்­ப­தைப் பற்றி அவ­ரி­டம் குறி கேட்­க­லாம் என்று முடிவு செய்து திரும்­பி­னேன். ஆனால் நான் போன நாள் புதன்­கி­ழமை என்­பது அப்­போ­து­தான் நினை­வுக்கு வந்­தது.

அன்று அவர் குறி சொல்­ல­மாட்டார் என்­ப­தால் அடுத்த செவ்வாய் அன்று வர­லாம் என வண்­டி­யைக் கிளப்­பி­னேன்.

சனிக்கிழமை ஒரு சாமானியர்

எல்லாரையும் போலவேதான் நானும் என்றாலும் சில வேளைகளில் என்னையே மறந்து, ஏதோ ஒரு நிலைக்குச் சென்று விடுகிறேன். ஒரு காரண காரியத்தை நான் சொன்னதாக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்கிறார் குறி சொல்லும் மகேந்திரன், 43.

ஐந்து நாள்கள் கழித்து சேவல் உயிரோடு இருந்தால் அது குறி சொல்லும் மகேந்திரன் குடும்பத்துக்குச் சொந்தம். ஆனால் அவ்வளவாக அது கைகூடுவதில்லை.

குறிப்புச் சொற்கள்