'பெரும் திரளாகக் கூட வேண்டாம்'

'பெரும் திரளாகக் கூட வேண்டாம்'

1 mins read
4c185ec9-d103-49a2-8d2d-83c0cc8429f0
-

புதுடெல்லி: நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 15,000க்கு மேல் பதிவாகும் நிலையில், சுதந்திர தினத்துக்கு பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்கும்படி மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானது.