புதுடெல்லி: பொதுத் தேர்தலை இப்போது நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டணியே வெற்றிபெறும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களவையின் 543 இடங்களில் 286ஐ அது கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. இந்தியா டுடே சஞ்சிகையும் 'சி-வோட்டர்' ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் 122ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்களில் 53 விழுக்காட்டினர் திரு மோடியே அடுத்த பிரதமராக வேண்டும் என்று கூறினர்.

