ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுதந்திர தினத்தையொட்டி ஒரு கோடி மாணவர்கள் ஒன்றிணைந்து நாட்டுப் பற்றுப் பாடல்களைப் பாடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் திடலில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று முன்தினம் ஒன்று கூடி நாட்டுப் பற்றைப் பறைசாற்றும் பாடல்களைப் பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஒரு கோடி மாணவர்கள் 25 நிமிட நேரம் தேசிய கீதம் உள்ளிட்ட நாட்டுப் பற்றுப் பாடல்களைப் பாடினர்.
இது உலகச் சாதனையாகப் பதிவாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய மாணவர்களுக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, மாநில அரசிடம் சான்றிதழை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என தெரிவித்துள்ளார்.

