பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு

பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு

2 mins read
3cc8c2b7-efe5-4c8c-b96c-10b46adc3d03
-

புது­டெல்லி: நாட்­டின் 75-வது சுதந்­திர தின விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், ராஜஸ்­தான் உட்­பட பாகிஸ்­தா­னின் மேற்கு எல்­லைப் பகுதி முழு­வ­தும் தீவி­ரக் கண்­கா­ணிப்பு பணியை எல்­லைப் பாது­காப்­புப் படை முடுக்­கி­விட்­டுள்­ளது.

சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 'நாடே முதன்மை, எப்போதும் முதன்மை'' என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் 200 மில்லியன் மூவண்ணக் கொடிகள் ஏற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், சுதந்­திர தின விழா கொண்­டாட்­டத்­தைச் சீர்­கு­லைக்க தீவி­ர­வா­தி­கள் பெரிய அள­வில் சதிச் செய­லில் ஈடு­ப­டக்­கூ­டும் என்­ப­தால் நாட்­டின் முக்­கிய பகு­தி­களிலும் விழாக் கொண்டாட்டப் பகுதிகளிலும் பாது­காப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்­தான் எல்­லைப் பகுதி முழு­வ­தும் தீவிர கண்­கா­ணிப்­புப் பணியை எல்­லைப் பாது­காப்­புப் படையினர் தொடங்கியுள்ளனர். இந்த தீவிர கண்­கா­ணிப்­புப் பணி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தொட­ரும்.

இந்த நட­வ­டிக்­கை­யின்­போது, தீவி­ர­வா­தி­க­ளின் ஊடு­ரு­வ­லுக்­குச் சாத்­தி­ய­மான இடங்­கள் அடையாளம் காணப்பட்டு தீவி­ர­மாகக் கண்­கா­ணிக்­கப்­பட்டு வருகிறது.

சந்தேகப்படும் இடங்­களில் பாது­காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்­தான் பகு­தி­யி­லி­ருந்து தானி­யங்கி வானூர்­தி­கள் அத்­து­மீறி நுழை­வது அண்­மை­கா­ல­மாக அதி­க­ரித்­துள்­ளது. இவற்­றைச் சுட்டு வீழ்த்­து­வ­தற்கு ராணு­வம் ஆணை பிறப்­பித்­துள்­ளது.

எல்­லைப் பகு­தி­யில் வாகனச் சுற்­றுக்­கா­வல் பணி, நடை காவல் பணி­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

உள்­ளூர்க் காவல்­து­றை­யி­ன­ரு­டன் இணைந்து, எல்­லைப் பாது­காப்­புப் படை வீரர்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நட­வ­டிக்கை ராஜஸ்­தான் மண்­டல எல்­லைப் பாது­காப்­புப் படை ஐஜி டேவிட் லால்­ரி­சங்கா மேற்­பார்­வை­யில் நடை­பெ­று­வ­தாக ராணு­வ வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

நாட்­டின் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பிர­த­மர் நரேந்­திர மோடி டெல்லி செங்­கோட்­டை­யில் சிறப்­புரை ஆற்ற உள்ள நிலை­யில், செங்­கோட்­டை­யைச் சுற்றி ஐந்து கிலோ மீட்­டர் சுற்­ற­ளவு தூரத்­திற்கு பலூன்­கள், பட்­டம் மற்­றும் தானி­யங்கி விமா­னங்­கள் பறக்க அரசு தடை விதித்­துள்­ளது.