புதுடெல்லி: ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லி வந்தடைந்த பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.
ஒரு மாதத்துக்கு முன்பு, 22 வயதான அந்தப் பெண் அண்மையில் நைஜீரியா சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் மூலம் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் டெல்லியில் இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது என்றும் டெல்லி சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.