மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிர்ப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிர்ப்பு

1 mins read
721cc8da-6c61-4b24-b290-016aab09e6e4
-

புது­டெல்லி: மின்­னணு வாக்­குப்­பதிவு இயந்­தி­ரத்­துக்கு பதினோறு எதிர்க்­கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.

மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­படு­வ­தா­க­வும் இத­னால் இந்­திய ஜன­நா­ய­கம் பெரும் சவாலை எதிர் கொண்­டுள்­ளது என்­றும் அக்­கட்சி­கள் கூறி­யுள்­ளன.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் முக்­கிய எதிர்க்­கட்­சி­க­ளான காங்­கி­ரஸ், மார்க்­சிஸ்ட், சமாஜ்­வாடி, பகு­ஜன் சமாஜ், இந்­திய கம்யூனிஸ்ட், தேசி­ய­வாத கம்­யூ­னிஸ்ட், தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி உட்­பட 11 எதிர்க்­கட்­சி­கள் பங்­கேற்ற மாநாடு நடை­பெற்­றது.

அதன் முடி­வில் மூன்று முக்­கிய தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்தி­ரங்­களில் சில குறை­பா­டு­கள் இருப்­ப­தால் அவை மறு­வ­டி­வ­மைப்பு செய்­யப்­பட வேண்­டும் என ஒரு தீர்­மா­னத்­தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் பத்­திரத் திட்­டத்தை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும் என்றும் ஊடகத் தளங்­கள் தவ­றான, வெறுப்­பூட்­டும் செய்­தி­களை பரப்ப தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை தடுக்க வேண்­டும் என்­றும் இரு வெவ்­வேறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.