தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரம்பரிய நினைவிடங்களில் திரண்ட மக்கள் கூட்டம்

1 mins read
6af8cbdb-8bc9-48c6-b793-dc7784eed6c0
நேற்று அன்பின் சின்னமான தாஜ்மகாலைக் காண திரண்டிருந்த கூட்டம். படம்: ஊடகம் -

சுதந்திர தினம்: லட்சக்கணக்கானோர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்

புது­டெல்லி: சுதந்­திர தினத்­தை­யொட்டி நாடு முழு­வ­தும் உள்ள பாரம்­ப­ரிய நினை­வி­டங்­களில் மக்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது. மேலும், பொழு­து­போக்கு பூங்­காக்­கள், திரை­ய­ரங்­கு­கள், கோவில்­கள் போன்ற பொது இடங்­க­ளி­லும் வழக்­கத்­தை­விட அதி­க­மா­னோர் காணப்­பட்­ட­னர்.

மேலும் 75ஆவது சுதந்­திர தினம் என்­ப­தால் பொது மக்­கள் மிகுந்த ஆர்­வத்­து­டன் கொண்­டாடி மகிழ்ந்­த­னர். அனைத்து மாநி­லங்­க­ளி­லும் லட்சக்கணக்கான மக்­கள் தங்­கள் வீடு­களில் இந்­திய தேசி­யக் கொடியை ஏற்றி வைத்­த­னர்.

தனி­யார் நிறு­வ­னங்­கள், பொது நல அமைப்­பு­கள் சார்­பாக சுதந்­திர தினத்­தை­யொட்டி சிறப்பு நிகழ்­வு­கள், கலை நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

மேலும், மூன்று நாள்­கள் தொடர் விடு­முறை என்­ப­தா­லும், பாரம்­பரிய நினை­வி­டங்­களில் நுழை­வுக் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தா­லும் மக்­க­ளி­டம் கூடு­தல் உற்­சா­கம் நில­வி­யது. அனைத்து இடங்­க­ளி­லும் சுற்­றுலாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது.

முன்­ன­தாக இந்­திய தொல்­லி­யல் ஆய்­வுத் துறை­யின் கீழ் பாது­காக்­கப்­பட்டு வரும் பாரம்­பரி­ய­மிக்க நினை­வி­டங்­களில் ஆகஸ்ட் 5 முதல் 15ஆம் தேதி வரை பொது­மக்­கள் கட்­ட­ண­மின்றி அனு­ம­திக்­கப்­ப­டுவா் என்று மத்­திய அரசு அறி­வித்­தி­ருந்­தது.

75ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த அறி­விப்பை வெளி­யி­டு­வ­தாக மத்­திய கலா­சார அமைச்சு தெரி­வித்­தது.

தாஜ்மகால் உள்­ளிட்ட நினை­வுச் சின்­னங்­கள், பாரம்­ப­ரிய நினை­வி­டங்­களில் ஏரா­ள­மா­னோர் குவிந்­த­தால் காவல்­து­றை­யி­ன­ரும் பெரு­ம­ள­வில் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். எந்­த­வித அசம்­பா­வித சம்­ப­வங்­களும் நிக­ழ­வில்லை.