மாநிலங்களில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட 75ஆவது சுதந்திர தினம்

மாநிலங்களில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட 75ஆவது சுதந்திர தினம்

2 mins read
bfd774a1-232d-445f-915f-701a563f5bcc
ஹைதராபாத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பிகாஷ்மீரில் நேற்று ஏராளமான இளையர்கள் ஸ்ரீநகரில் திரண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். படம்: இபிஏ -
multi-img1 of 2

கர்நாடக சட்டப்பேரவை கட்டடம் முன்பு தேசியக்கொடியை ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடிய பெண்கள். படம்: இபிஏ

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வின் 75ஆவது சுதந்­திர தின விழா அனைத்து மாநி­லங்­க­ளி­லும் நேற்று விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­பட்­டது.

இதை­யொட்டி கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்­க­ளூ­ரு­வில் 10 ஆயி­ரம் காவல்­து­றை­யி­னர் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு சுதந்­திர தின விழாவை காண பொது­மக்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது. மேலும், பள்ளி மாண­வர்­க­ளின் கலை நிகழ்ச்­சி­களும் இடம் பெற்­றன.

கொண்டாட்டத்தை ஒட்டி பெங்­க­ளூரு மாந­க­ரம் விழாக்­கோ­லம் பூண்­டி­ருந்­தது என ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

ஆந்­திரா

விஜ­ய­வா­டா­வில் நடை­பெற்ற சுதந்­திர தின விழா­வில் ஆந்­திர மாநில முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி தேசி­யக் கொடியை ஏற்றி வைத்து உரை­யாற்­றி­னார்.

அப்­போது, குறிப்­பிட்ட சில சமூ­கத்­தி­னர் நாடு சுதந்­தி­ரம் அடைந்து 75 ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யி­லும், அதன் பலன்­களை அனு­ப­விக்க முடி­ய­வில்லை எனக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்த உண்­மையை ஏற்­றுக்­கொண்டு, பிரச்­சி­னை­க­ளைக் களை­வ­தற்கு அனை­வ­ரும் முயற்சி செய்ய வேண்­டும் என்­றும் ஆந்­திர அரசு அதற்­கான அனைத்து முன்­னெ­டுப்­பு­க­ளை­யும் விரை­வில் மேற்­கொள்­ளும் என்­றும் அவர் கூறி­னார்.

மகா­ராஷ்­டிரா

மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று நடை­பெற்ற சுதந்­திர தின நிகழ்­வில் முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே தேசி­யக் கொடியை ஏற்றி வைத்­தார்.

அப்­போது உரை­யாற்­றிய அவர், அம்­மா­நி­லத்­தில் உள்ள சாமா­னி­யர்­க­ளின் நல­னுக்­காக தமது அரசு பாடு­படும் என்­றார்.

கேரளா

அண்டை மாநி­ல­மான கேர­ளா­வில் முதல்­வர் பின­ராயி விஜ­யன் தேசி­யக்­கொ­டியை ஏற்றி வைத்து உரை­யாற்­றி­ய­போது கூட்­டாட்சி, மதச்­சார்­பின்மை ஆகி­ய­வற்­றுக்கு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் அளித்­துள்ள மதிப்பை உணர்ந்து அனை ­வ­ரும் செயல்­பட வேண்டும் என்­றார்.

சமத்­து­வம், சுதந்­தி­ரம் ஆகி­ய­வை­தான் சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­க­ளின் கன­வு­க­ளாக இருந்­தன என்­றார் அவர்.