கர்ப்பிணிப் பெண்ணை சிதைத்த 11 பேரை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசு

கர்ப்பிணிப் பெண்ணை சிதைத்த 11 பேரை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசு

2 mins read
592b34d6-c3c7-4701-a27f-9c8625b32e2d
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் கலவரத்­தின்­போது ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலி­யல் வன்­கொடுமைக்கு உட்­ப­டுத்­திய வழக்­கில் ஆயுள் சிறை­வா­சம் அனு­பவித்து வரும் 11 குற்­ற­வா­ளி­களை குஜ­ராத் மாநில அரசு முன்­கூட்­டியே விடு­தலை செய்­துள்­ளது.

இதற்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜ­ராத் கல­வ­ரத்­தின்­போது பில்­கிஸ் பானு என்ற இஸ்­லா­மி­யப் பெண் பாலி­யல் வன்­கொடு­மைக்கு ஆளா­னார்.

அப்­போது அவர் ஐந்து மாத கர்ப்­பி­ணி­யாக இருந்­தார். மேலும் அவ­ரது குடும்­பத்­தார் 14 பேர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

கொடூ­ரத்­தின் உச்­ச­மாக பானு­வின் கண்­முன்னே அவ­ரது மூன்று வயது மகள் கொல்­லப்­பட்­டார். இச் சம்­ப­வம் ஒட்­டு­மொத்த நாட்­டையே உலுக்­கி­யது. இது தொடர்­பாக பதி­னோரு பேர் கைது செய்­யப்­பட்டு, வழக்­கும் பதி­வா­னது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நீதி­மன்­றம் 11 பேரை­யும் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­வித்து, ஆயுள் தண்­ட­னை­யும் விதித்­தது.

இந்­நி­லை­யில், சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் குற்­ற­வா­ளி­களில் ஒரு­வர், தாம் முன்­ன­தாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டும் எனக் கோரி உச்ச நீதி­மன்­றத்தை அணு­கி­னார். இது­கு­றித்து குஜராத் அரசு பதி­ல­ளிக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதை­ய­டுத்து மாநில அரசு சிறப்­புக் குழு ஒன்றை அமைத்­தது. சில மாதங்­க­ளுக்­குப் பிறகு 11 பேரை­யும் விடு­தலை செய்­ய­லாம் என அந்­தக் குழு பரிந்­து­ரைத்­தது என்­றும் அது மாநில அர­சி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் சம்­ப­வம் நிகழ்ந்த பஞ்ச்­மால் மாவட்ட ஆட்சி­யர் தெரி­வித்­தார்.

கூட்­டுப் பாலி­யல் வன்­கொடுமைக்கு ஆளான பானு பில்­கிஸ் குடும்­பத்­தில் அவர் மட்­டுமே எப்­ப­டியோ தப்­பிப் பிழைத்­தார்.

அதன் பிற­கும்­கூட அவ­ருக்­குப் பல்­வேறு மிரட்­டல்­கள் வந்­த­தா­க­வும் அவ­ருக்கு பக்­க­ப­ல­மாக உள்ள ஆதா­ரங்­கள் அழிக்­கப்­பட்­ட­தா­க­வும் ஊட­கங்­களில் பர­ப­ரப்­புத் தக­வல்­கள் வெளி­வந்­தன.

உச்ச நீதி­மன்­றம் பானு­வின் வழக்கை சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைத்து நேர­டி­யா­கக் கண்­கா­ணித்­ததை அடுத்து குற்­ற­வா­ளி­களை அடை­யா­ளம் காட்­டி­ய­து­டன் தொடர்ந்து நீதிக்­கா­கப் போராடி வந்­தார் பானு.

இந்­நி­லை­யில், தண்­டனை பெற்ற 11 பேரை­யும் தண்­ட­னைக்­கா­லம் முடி­வ­தற்கு முன்பே விடு­வித்து இருப்­பதை ஏற்க இய­லாது என எதிர்க்­கட்­சி­கள் கடும் கண்டனம் தெரி­வித்­துள்­ளன.