31 அமைச்சர்கள்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்

31 அமைச்சர்கள்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்

1 mins read
93ebf9b6-8ee3-45d4-b520-f29df0a996a3
-

பாட்னா: பீகார் மாநி­லத்­தில் புதிய ஆட்சி அமைந்­துள்ள நிலை­யில், முதல்­வர் நிதிஷ்­கு­மார் தலை­மை­யிலான அமைச்­சரவை நேற்று விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டது.

நேற்று 31 பேர் அமைச்­சர்­க­ளா­கப் பொறுப்­பேற்­றுக்கொண்­ட­னர். அம்­மா­நில ஆளு­நர் சௌகான் பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

31 அமைச்­சர்­களில் 16 பேர் முன்­னாள் முதல்­வர் லாலு பிர­சாத் யாதவ்­வின் ராஷ்ட்­ரிய ஜனதா தளம் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்.

ஐக்­கிய ஜன­தா­த­ளம் கட்சி எம்எல்­ஏக்­கள் 11 பேருக்­கும் காங்­கி­ரஸ் கட்­சியில் இரு­வ­ருக்­கும் அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மற்­றொரு கூட்­ட­ணிக் கட்­சியைச் சேர்ந்த ஒரு­வ­ருக்­கும் சுயேச்சை எம்­எல்­ஏ­வுக்­கும் அமைச்­ச­ர­வை­யில் இடம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

புதி­தாக பத­வி­யேற்­றுக்கொண்ட அமைச்­சர்­க­ளுக்­கான துறை விவ­ரங்­கள் ஏதும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அது தொடர்­பான ஆலோ­சனை­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் விரை­வில் விவ­ரங்­கள் வெளி­யா­கும் என்­றும் கூறப்படுகிறது.

ராஷ்­டி­ரிய ஜனதா தளம் சார்­பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுள்­ளார். இத­னால் அக்­கட்­சி­யி­னர் உற்­சாகம் அடைந்­துள்ள வேளை­யில், அமைச்­ச­ர­வை­யில் அக்­கட்­சியைச் சேர்ந்­த­வர்­கள்­தான் அதிக எண்­ணிக்­கை­யில் உள்­ள­னர்.