38 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ராணுவ வீரரின் சடலம்

38 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ராணுவ வீரரின் சடலம்

1 mins read
d0d83d5f-07f0-4db3-8283-b2619abb96ac
சந்திரசேகர் ஹார்போலா வின் குடும்பத்தார். இன்றளவும் அவரை நினைத்து சோகத்தில் மூழ்கி உள்ளனர்.படம்: ஊடகம் -

ஸ்ரீந­கர்: 38 ஆண்­டு­க­ளுக்கு முன் இம­ய­ம­லைப் பகு­தி­யில் காணா­மல்­போன இந்­திய ராணுவ வீர­ரின் உடல் மீட்­கப்­பட்­டுள்­ளது. சியாச்­சன் மலைப்­ப­கு­தி­யில் அவ­ரு­டைய சட­லம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

1984ல் இந்­திய-பாகிஸ்­தான் எல்­லை­யில் உள்ள சியாச்­சன் மலைப்­ப­கு­தி­யில் ஏற்­பட்ட பனிச்­சரி­வில் சந்­தி­ர­சே­கர் ‌ஹார்­போலா உள்­ளிட்ட 20 இந்­திய இரா­ணுவ வீரர்­கள் சிக்­கிக்­கொண்­ட­னர். 15 பேரின் சட­லங்­கள் மட்­டுமே அப்­போது மீட்­கப்­பட்­டன.

சந்­தி­ர­சே­க­ரின் சட­லத்தைக் கண்டு­பி­டித்த இரா­ணுவப் பிரிவு மற்­றொ­ரு­வ­ரின் உட­லை­யும் கண்டு­பி­டித்­துள்­ளது. அவ­ரு­டைய அடை­யா­ளம் இன்­னும் உறு­தி­ப்ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

சந்­தி­ர­சே­க­ருக்கு முழு இரா­ணுவ மரி­யா­தை­யு­டன் இறு­திச் சடங்கு நடை­பெ­றும் என்று கூறப்­பட்­டது.

சியாச்­சன் மலைப்­ப­கு­திக்­காக இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் பல ஆண்­டு­க­ளாக சண்­டை­யிட்டு வரு­கின்­றன. உல­கின் மிக உய­ர­மான ராணுவ மோதல் களமாக சியாச்­சன் வர்­ணிக்­கப்­ப­டு­கிறது. இந்தப் பகு­தி­யில் ஏற்­பட்ட பனிச்சரிவுகளி­லும் பனிப்­பு­யல்­க­ளி­லும் இரு­த­ரப்­பி­லிருந்து பல வீரர்­கள் மாண்டுவிட்டனர்.

2012ல் ஏற்­பட்ட பனிச்­ச­ரி­வில் 129 பாகிஸ்­தா­னிய இரா­ணுவ வீரர்­கள் மாண்­ட­னர். இதனைத் தொடர்ந்து, 2016ல் பத்து இந்­திய வீரர்­களும் 2019ல் நான்கு வீரர்­களும் சியாச்சன் பனிச்­சரி­வில் சிக்கி மாண்­டுவிட்டனர்.