விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் பதற்றம்

விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் பதற்றம்

2 mins read
130c4b0c-d25b-4b29-a8eb-f7c854f49300
அகற்றப்படும் பதாகை. படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­கள் தொடர்­பாக கர்­நா­டக அரசு ஊட­கங்­களில் வெளி­யிட்ட விளம்­ப­ரத்­தால் சர்ச்சை வெடித்­துள்­ளது.

அந்த விளம்­ப­ரங்­களில் நாட்­டின் முதல் பிர­த­ம­ரான ஜவகர்­லால் நேரு­வின் படம் இடம்­பெ­ற­வில்லை. இதற்கு காங்­கி­ரஸ் கட்சி கடும் கண்­ட­னம் தெரிவித்­துள்ளது. இதை­ய­டுத்து பாஜ­க­வி­னர் வைத்த பதா­கை­கள் பல கிழித்­தெ­றி­யப்­பட்­டன.

அக்­கு­றிப்­பிட்ட விளம்­ப­ரத்­தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்­திர போஸ், வல்­ல­­பாய் பட்­டேல், அம்­பேத்­கர், பகத் சிங், சாவர்க்­கர் உள்­ளிட்­டோ­ரின் படங்­கள் மட்­டுமே இடம்­பெற்­றி­ருந்­தன. நேரு படம் காணப்­ப­ட­வில்லை.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கர்­நா­டக முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா, நாட்­டின் சுதந்­தி­ரத்­துக்­கா­கப் போரா­டிய தலை­வர்­க­ளின் உன்­ன­த­மான தியா­கங்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் மத்­திய, மாநில அர­சு­கள் செயல்­ப­டக் கூடாது என்­றார்.

இதை­ய­டுத்து கர்­நா­ட­கா­வின் பல்­வேறு பகு­தி­களில் பாஜ­க­வி­னர் வைத்­தி­ருந்த பதா­கை­கள் சில­ரால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன.

குறிப்­பாக, சுதந்­திர தினத்­தை­யொட்டி சாவர்க்­கர் படத்­து­டன் வைக்­கப்­பட்ட பதா­கை­கள் கிழித்­தெ­றி­யப்­பட்­டன. இதற்­குப் பாஜ­க­வி­னர் எதிர்ப்பு தெரி­வித்­ததை அடுத்து பதற்­றம் ஏற்­பட்­டது.

மேலும் பஜ்­ரங் தளம் அமைப்­பி­ன­ரும் போராட்­டத்­தில் குதித்­த­தால் ஷிமோகா, மங்­க­ளூரு உள்­ளிட்ட பதற்­ற­மான பகு­தி­களில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பெங்­க­ளூரு, மைசூரு உள்­ளிட்ட பகு­தி­களில் திப்பு சுல்­தா­னின் படத்­து­டன் இஸ்­லா­மி­யர்­கள் வைத்த சுதந்­திர தின வாழ்த்து பதா­கை­களும் அடை­யா­ளம் தெரி­யாத சில­ரால் கிழித்­தெ­றி­யப்­பட்­ட­தால் பதற்­றம் ஏற்­பட்­டது.

இதற்­கி­டையே கர்­நா­டக மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இந்து அமைப்­பு­கள் சார்பில் பல்­வேறு சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. சில பதா­கை­களும் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றுள் குறிப்­பிட்ட சில பதா­கை­களை அகற்­றக் கோரி இஸ்­லா­மிய இளை­ஞர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்தே சிமோகா உள்ளிட்ட பல்வேறு பகு­தி­களில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டதாகவும் கண்­கா­ணிப்­பு நடவடிக்கைகள் தீவிர­ம­டைந்­துள்­ளது என்றும் கர்நாடக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.