'குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவது அரசின் கடமை'

'குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவது அரசின் கடமை'

2 mins read
2fa44d93-36f7-4690-99ea-ffae193b6fb8
ஜெய்சங்கர். படம்: ஊடகம் -

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புது­டெல்லி: இந்­திய மக்­க­ளுக்கு குறை­வான விலை­யில் பெட்­ரோல் விற்­கப்­பட வேண்­டும் என்­பதை கவ­னத்­தில் கொண்­டு­தான் ரஷ்யா­வி­டம் இருந்து மத்­திய அரசு கச்சா எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்­வதாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

நாட்டு மக்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில் இந்­தியா ஆதா­யம் அடை­யும் வகை­யில் செயல்­ப­டு­வது தமது தார்­மீ­கக் கடமை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெடுத்­ததை அடுத்து, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள் பொரு­ளா­தா­ரத் தடை விதித்­துள்­ளன. இந்­நி­லை­யில், அந்­நா­டு­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி, ரஷ்­யா­வி­டம் இருந்து இந்­திய அரசு கச்சா எண்­ணெய் வாங்கி வரு­கிறது. நாளுக்­கு­நாள் இந்த இறக்­கு­மதி அளவு அதி­க­ரித்த வண்­ணம் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் அழுத்­தத்­தை­யும் மீறி கச்சா எண்­ணெய் கொள்­மு­த­லில் இந்­தியா தீவி­ரம் காட்டி வரு­வது குறித்து வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

ஒவ்­வொரு நாடும் எரி­பொ­ருள் விலையை சமா­ளிக்க ஏதே­னும் நட­வ­டிக்­கையை எடுத்து வரு­வதாக­வும் இந்­தி­யா­வும் அதைத்­தான் செய்­கிறது என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எண்­ணெய், எரி­வாயு விலை அதி­க­ரித்­துள்­ளது. பாரம்­ப­ரி­ய­மாக எண்­ணெய் விநி­யோ­கிக்­கும் நாடு­கள் பல­வும் ஐரோப்­பிய சந்­தை­களில் கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளன. குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­களை ஐரோப்­பிய நாடு­கள் நம்­பத் தொடங்­கி­ உள்­ளன.

"இது­போன்ற சூழ­லில் ஒவ்­வொரு நாடும் தனக்­கான சிறந்த சந்­தையை உறு­திப்­ப­டுத்த முய­லும். ஆனால் நமது அணு­கு­முறை சற்று வித்­தி­யா­ச­மா­னது.

"நாம் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக இத­னைச் செய்­யா­மல் நமது விருப்­பங்­களை முன்­வைத்­ததில் வெளிப்­ப­டை­யாக, நேர்­மை­யாக இருக்­கி­றோம்," என்று ஜெய்­சங்­கர் அப்­பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் இவ்­வி­வ­கா­ரத்­தில் தொடக்­கத்­தில் இந்­தி­யாவை எதிர்த்த நாடு­க­ளும்­கூட மத்திய அர­சின் நோக்­கத்­தைப் புரிந்துகொண்­டுள்­ள­தா­கக் குறிப்பிட்டுள்ள அவர், எந்­த­வொரு அர­சுக்­கும் மக்­க­ளின் தேவையை நிறை­வேற்ற வேண்­டிய பொறுப்பு உள்­ளது என்­றார்.

"இந்­தியா ரஷ்­யா­வி­ட­மி­ருந்து ஒரு மாதம் முழு­வ­தும் வாங்­கும் எண்­ணெய்­யின் அளவு ஐரோப்­பிய நாடு­கள் ஒரு மதிய வேளை­யில் கொள்­மு­தல் செய்­யும் அளவை ஒத்­தது. இந்­தியா தற்­போ­தைய நில­வ­ரப்­படி மாதம் 950,000 பேரல் கச்சா எண்­ணெய்யை ரஷ்­யா­வி­ட­மி­ருந்து இறக்­கு­மதி செய்­கிறது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

இதற்­கி­டையே, ரஷ்­யா­வி­டம் இருந்து பெற்ற கச்சா எண்­ணெய் மூலம் தயா­ரிக்­கப்­பட்ட எரி­பொ­ருள் இந்­திய கப்­பல் மூலம் நியூ­யார்க் நக­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் ரஷ்­யா­வில் இருந்து கச்சா எண்­ணெய்­யு­டன் வந்த கப்­பல் ஆழ்­க­ட­லில் நிறுத்­தப்­பட்­டது என்றும் பின்­னர் அதில் இருந்த கச்சா எண்­ணெய் மொத்­த­மாக இந்­தி­யக் கப்­பல் ஒன்­றுக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் அமெ­ரிக்க கரு­வூ­லத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து அந்­தக் கச்சா எண்ணெய் குஜ­ராத்­தில் உள்ள துறை­மு­கத்­துக்­குக் கொண்டு வரப்­பட்டு, அங்கு சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பின்­னர் நியூ­யார்க்­கிற்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக அமெரிக்கா கூறு­கிறது.