மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் ஐம்பது பேர் காயமடைந்தனர்.
எனினும், உயிரிழப்புகள் ஏதுமில்லை என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
சத்தீஸ்கரில் இருந்து ராஜஸ்தான் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று, நேற்று அதிகாலை மகாராஷ்டிராவில் உள்ள கொண்டியா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இச்சமயம் ஒரே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இதில் பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் ஐம்பது பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்புக் குழுவினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

