கட்சித் தலைமை அறிவித்த பதவி: சில மணி நேரங்களில் விலகிய குலாம் நபி ஆசாத்

கட்சித் தலைமை அறிவித்த பதவி: சில மணி நேரங்களில் விலகிய குலாம் நபி ஆசாத்

1 mins read
a0fd73b7-b139-41c6-aa92-ebb5bfdda275
குலாம் நபி ஆசாத். படம்: ஊடகம் -

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சித் தலைமை அளித்த பொறுப்பில் இருந்து சில மணி நேரங்களில் விலகி உள்ளார்.

இதன் மூலம் காங்கிரசில் நிலவும் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அக்கட்சியின் ஜம்மு, காஷ்மீருக்கான பிரசாரக் குழுவின் புதிய தலைவராக குலாம் நபி ஆசாத் அறிவிக்கப்பட்டார். அவர் முன்பு காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அரசாங்கத்திலும் கட்சியிலும் வகித்த அனுபவம் உள்ளவர்.

இந்­நி­லை­யில் காங்­கி­ரஸ் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக அதன் மூத்த தலை­வர்­கள் 23 பேர் போர்க்­கொடி உயர்த்­தி­னர். அவர்­களில் குலாம் நபி ஆசாத்­தும் ஒரு­வர்.

இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை.

இந்­நி­லை­யில் குலாம் நபிக்கு புதிய பொறுப்பு அளிக்­கப்­பட்­டது. ஆனால் அவரோ, அந்த அறி­விப்பு வெளி­யான சில மணி நேரங்­களில் பிர­சா­ரக் குழு தலை­மைப் பொறுப்­பில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளார்.

மேலும், மாநில அர­சி­யல் விவ­கா­ரக் குழு­வில் இருந்­தும் அவர் ராஜி­னாமா செய்­துள்­ளார். இதனால் காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­களில் சலசலப்பு நில­வு­கிறது.