புதுடெல்லி: இந்தியாவில் 2021-2022 பயிர் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி ஏறத்தாழ 311 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்று இந்திய வேளாண் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரைப்பட்ட 2021-22 பயிர் ஆண்டுக்கான நான்காவது முன்னுரைப்பை அமைச்சு வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜூனில் முடிந்த பயிர் ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 311 மில்லியன் டன்களாக இருக் கும். கடந்த பயிர் ஆண்டில் இது சுமார் 310 மில்லியனாக இருந்தது என்று அது கூறியது.
அதேபோல், 2021-2022ல் நாட்டின் மொத்த கோதுமை உற்பத்தி 3% குறைந்து 100.68 மில்லியன் டன்களாக இருக்கும்.
வட மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் வெப்ப அலை காரணமாக பயிர்கள் கருகியதால் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்து.
அரிசி உற்பத்தி 130.29 மில்லியன் டன்களாக இருக்கும். இது, முந்தைய ஆண்டில் 120.43 மில்லியன டன்களாக இருந்தது.
2020-21 பயிர் ஆண்டில் 250 மில்லியன் டன்களாக இருந்த பருப்பு உற்பத்தி, இந்தப் பயிர் ஆண்டில் 270 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி முந்தைய ஆண்டில் 30.59 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 2021-22 பயிர் ஆண்டில் அது 30.76 மில்லியன் டன்களாக இருக்கும். கரும்பு உற்பத்தி முந்திய ஆண்டில் 400.53 லட்சம் டன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 430.18 மில்லியன் டன்களாக இருக்கும் என்று அமைச்சு முன்னுரைப்பில் தெரிவித்துள்ளது.

