புதுடெல்லி: உலகிலேயே காற்றில் நுண்துகள்கள் அதிகம் கலந்து படுமோசமாக மாசுபட்டு இருக்கும் நகரம் இந்தியாவின் புதுடெல்லி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உடல்நல பாதிப்புப் பயிலகம்' என்ற அனைத்துலக அமைப்பு, உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியலை வெளியிட்டது.
ஆய்வுக்கு மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் பிஎம் 2.5 மற்றும் என்ஓ2 ஆகிய தீங்கு விளைவிக்கும் மாசுத் துகள்கள், அந்த நகர்களின் காற்றில் எந்த அளவுக்கு உள்ளன என்பது ஆராயப்பட்டதாகவும் அது கூறியது.
அதிக மாசு கலந்துள்ள காற்றைக் கொண்ட முதல் 10 நகர்களில் 2வது இடத்தில் கோல்கத்தா இருக்கிறது. இதில், கானா (நைஜீரியா), லீமா (பெரு), டாக்கா (பங்ளாதேஷ்), ஜகார்த்தா (இந்தோனீசியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா), அக்ரா (கானா) ஆகிய நகரங்களும் உள்ளன.
என்ஓ2 ரக மாசு காற்றில் அதி கம் உள்ள நகர்களில் ஷாங்காய், மாஸ்கோ, டெஹ்ரான் (ஈரான்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க், பெய்ஜிங், கெய்ரோ (எகிப்து), அஸ்கபத் (துர்க்மெனிஸ்தான்), மின்ஸ்க் (பெலாரஸ்), இஸ்தான்புல் (துருக்கி), ஹோ சி மின் சிட்டி (வியட்நாம்) முதல் 10 இடங்களில் உள்ளன.