பீகார்: 72% அமைச்சர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள்

பீகார்: 72% அமைச்சர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள்

1 mins read
471e77f0-72b5-45e5-9db1-84cc326577b1
-

பாட்னா: பீகார் அமைச்­சர்­களில் 72 விழுக்­காட்­டி­னர் மீது கடும் குற்ற வழக்­கு­கள் இருப்­ப­தாக 'ஜன­நா­யக சீர்­தி­ருத்­தச் சங்­கம்' என்ற தேர்­தல் உரிமை அமைப்பு அறிக்கை­யில் தெரி­வித்­துள்­ளது.

பீகா­ரின் முதல்­வர் நிதீஷ் குமார் பாஜக கூட்­ட­ணியை முறித்­துக்­கொண்டு ராஷ்­டி­ரிய ஜன­தா­த­ளம், காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­க­ளுடன் புதிய அரசை அமைத்­துள்­ளார்.

நிதீஷ் குமார் முத­ல­மைச்­ச­ராக மீண்­டும் பத­வி­யேற்­றுள்ள நிலை­யில், எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தின் தலை­வர் தேஜஸ்வி யாதவ் மாநி­லத்­தின் துணை முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­றுள்­ளார்.

புதிய கூட்­டணி அர­சில் 33 அமைச்­சர்­கள் புதி­தாக பொறுப்­பேற்­றுள்­ள­னர். இவர்­க­ளின் குற்றப்­பின்னணி குறித்த விவ­ரங்­களை ஜன­நா­யக சீர்­தி­ருத்­தச் சங்­கம் வெளி­யி­ட்டுள்­ளது.

மொத்­த­முள்ள 33 அமைச்­சர்­களில் 23 அமைச்­சர்­கள் அதா­வது 72% குற்ற வழக்­குப் பின்­னணி கொண்­ட­வர்­கள். அவர்­களில் 53% அல்­லது 17 அமைச்­சர்­கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதி­வா­கி ­உள்ளன. 2020 தேர்­தலில் தாக்­கலான வேட்­பு­மனு பிர­மா­ணப் பத்­தி­ரங்கள் அடிப்­ப­டை­யில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.