மத்திய பிரதேச தலைநகர் போபாலைச் சேர்ந்தவர் ஆஞ்சல் குப்தா. சிற்றுண்டிகள் விற்பனை செய்து வரும் இவரது மகளுக்கு அண்மையில் ஒரு வயது நிறைவடைந்தது. இதையடுத்து, பெண் குழந்தைகள் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதையடுத்து, மிகப் பெரிய விளையாட்டுத்திடல் ஒன்றில் பிரம்மாண்ட கூடாரம் அமைத்து, சுமார் ஒரு லட்சம் பானிபூரிகளைத் தயாரித்து, பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அம்மாநில முதல்வரும் பாராட்டியுள்ளார்.
படம்: ஊடகம்

