இரு துறவிகள் மோதல்: குண்டுவெடிப்பால் பதற்றம்

இரு துறவிகள் மோதல்: குண்டுவெடிப்பால் பதற்றம்

1 mins read
c2402492-8fa5-4b70-bfea-b0a184bc0210
-

லக்னோ: இரு துற­வி­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட மோதலை அடுத்து குண்டு வெடிப்­புச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள நர­சிங்­கர் கோவில் மடத்­துக்கு இரு துற­வி­களும் சொந்­தம் கொண்­டா­டு­கின்­ற­னர். இத­னால் ஏற்­பட்ட மோதல் கல­வ­ரத்­தில் முடிந்­ததை அடுத்து, அங்கு பாது­காப்பு ஏற்­பா­டு­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அயோத்தி நக­ரின் ராய்­கஞ்ச் பகு­தி­யில் பழமைவாய்ந்த நர­சிங்­கர் கோவில் அமைந்­துள்­ளது. இக்­கோ­வி­லுக்­குச் சொந்­த­மான மடத்­தின் தலை­வ­ராக ராம் சரண் தாஸ் பொறுப்­பில் உள்­ளார்.

இவ­ருக்­கும் அக்­கோ­வி­லில் பூசை­க­ளுக்­குப் பொறுப்­பேற்­றுள்ள மற்­றொரு துற­வி­யான ராம் சங்­கர் தாசுக்­கும் இடையே திடீ­ரென கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, ராம் சங்­கர் மடத்தை விட்டு வெளி­யேற வேண்­டும் என ராம் சரண் உத்­த­ரவிட, ராம் சங்­கரும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் மாலை இக்­கோ­வி­லில் திடீ­ரென குண்டு வெடித்த சத்­தம் கேட்­டது.

இத­னால் பீதி­ய­டைந்த அப்­பகுதி மக்­கள் காவல்­து­றைக்குத் தக­வல் தெரி­வித்­த­னர். விரைந்து வந்த காவல்­துறை­யி­னர், இரு துற­வி­க­ளின் ஆத­ர­வா­ளர்­களை­யும் காவல் நிலை­யத்­துக்கு அழைத்­துச் சென்று விசா­ரணை நடத்­தி­னர்.

காவல்­து­றை­யி­னர் தலை­யீட்­டுக்­குப் பிறகு கோவி­லி­லும் மடத்­தி­லும் அமைதி நில­வு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­ற­ன.