புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த சிலர் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கு இவர்கள் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களின் முக்கியத் தகவல்களைச் சீனாவிலும் ஹாங்காங்கிலும் உள்ள கணினித் தரவுச் சேமிப்புக் கட்டமைப்புகளில் இவர்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
சிறிய அளவில் கடன் வழங்குவதாகக் கூறி கைத்தொலைபேசிச் செயலிகளை இவர்கள் பயன்படுத்தினர்.
பதிவிறக்கம் செய்த பிறகு பயனாளர்கள் செயலி கேட்கும் அனுமதிகளைத் தந்தால் வங்கிக் கணக்கில் பணம் கிடைக்கும்.
ஆனால் மோசடிக்காரர்கள் பயனாளர்களைத் தொடர்புகொண்டு நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டிப் பணம் பறித்தனர்.
இவ்வாறு மோசடி செய்த பணத்தை இவர்கள் மின்னிலக்க நாணயங்களாக மாற்றியதாகக் கூறப்பட்டது.

