இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 20க்கும் மேற்பட்டோர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 20க்கும் மேற்பட்டோர் பலி

1 mins read
ad58f5e7-f7f2-42cc-b948-72920bbe7c97
மாண்டி வட்டார மலைப்பாதையில் சென்ற லாரி மீது பாறைகள் தகர்ந்து விழுந்தன. படம்: இந்திய ஊடகம் -

சிம்லா: இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வில் கனத்த மழை பெய்­து­வ­ரும் நிலை­யில் திடீர் வெள்­ளம், நிலச்­சரிவு ஆகி­ய­வற்­றால் 22 பேர் உயிர் இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் எட்டு பேர் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் சில­ரைக் காண­வில்லை என்று தேசி­யப் பேரி­டர் மீட்­புக் குழு தெரி­வித்­தது.

நிலச்­ச­ரி­வி­லும் வெள்­ளத்­தி­லும் பாதிக்­கப்­பட்­டோ­ரைத் தேடி மீட்­கும் பணி­கள் தொட­ரும் வேளை­யில், மருத்­துவ உத­விப் பொருள்­கள் பாதிக்­கப்­பட்­டோ­ரைச் சென்­ற­டை­வதை உறு­தி­செய்­யும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஏறத்­தாழ 750 சாலை­களில் போக்­கு­வ­ரத்து தடை­பட்­டுள்­ளது. மணாலி-சண்­டி­கர் நெடுஞ்­சாலை, சிம்லா-சண்­டி­கர் நெடுஞ்­சாலை ஆகி­ய­வை­யும் இவற்­றில் அடங்­கும்.

காங்ரா மாவட்­டத்­தில் பாலம் ஒன்று பெரு­ம­ழை­யால் இடிந்­த­தை அ­டுத்து சில ரயில் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

பஞ்­சாப்-இமாச்­ச­லப் பிர­தேச எல்­லை­யில் உள்ள காங்­ரா­வில் சக்கி ஆற்­றின்­மீது கட்­டப்­பட்ட 800 மீட்டா் நீள ரயில் பாலத்­தின் இரண்டு தூண்­கள் வெள்­ளத்­தால் இடிந்து விழுந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனா்.

துண்­டிக்­கப்­பட்ட சாலை­களில் போக்­கு­வ­ரத்­தைச் சீராக்­கும் பணி­கள் நடை­பெ­று­கின்­றன.

கனத்த மழையால், மாநி­லத்­தின் சில பகு­தி­களில் தண்­ணீர், மின்­சார விநி­யோ­கம் தடை­பட்­டது.