பெண் ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெண் ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
4948e0ee-af1c-42d0-b1b1-8d4f621ff701
-

புது­டெல்லி: அறி­வி­யல், தொழில்­துறை ஆராய்ச்சி மன்றத்­தில் பெண்­க­ளின் பங்­கேற்பு அதிகரித்­துள்­ளது என்­றும் இந்­தப் பங்­கேற்பை மேலும் அதி­க­ரிக்­கச் செய்­வதே தமது நோக்­கம் என்­றார் அம்­மன்­றத்­தின் புதிய, இயக்­கு­ந­ரான தமிழகத்தைச் சேர்ந்த டாக்­டர் கலைச்­செல்வி தெரிவித்தார்.

38 ஆய்­வ­கங்­கள், 4,500 விஞ்­ஞா­னி­க­ளைக் கொண்ட இம்­ம­ன்­றத்­தின் முதல் பெண் இயக்­கு­ந­ரான இவர், அறிவியலைத் தொட­ரும் பெண்­கள் மீதான பெற்­றோ­ரின் அணு­கு­மு­றை­யும் தற்­போது மாற்­றம் கண்­டுள்­ளது என்­றும் பெண்­கள் இப்­போது அதி­க­மாக ஊக்­கு­விக்­கப்ப­டு­கி­றார்­கள்," என்­றும் கூறு­கி­றார்.

"அறி­வி­ய­லில் செயற்கை நுண்­ண­றி­வின் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தப் பிரி­வில் அடுத்த ஐந்து அல்­லது ஆறு ஆண்­டு­களில் பெண்­க­ளின் பங்­கேற்­பில் அதி­வேக வளர்ச்சி ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கி­றோம். இணைய நூல­கங்­க­ளுக்­கான அணு­கல் உள்­ளிட்ட தொலைவி; இருந்­த­படி செயல்­பட அனு­ம­திக்­கும் அதி­ந­வீன கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் பெண்­கள் பங்­கேற்பு அதி­க­ரிக்­கும்," என்­கி­றார் டாக்டர் கலைச்­செல்வி.