பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவரை பணிநீக்கம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.
இந்த மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டறிவதற்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர். அப்போது மருத்துவர் ஒருவர் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்கிறார் என்று கிடைத்த புகாரை உடனடியாக விசாரிக்கும்படி உத்தரவிட்டார். அத்துடன் விசாரணை முடியும்வரை அந்த மருத்துவரை பணியிடைநீக்கம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லாத வகையில், தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இங்கு கிடைக்க வழி வகை காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அவ்வகையில் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காகாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

