பிள்ளையாருக்கு ரூ.316 கோடி காப்பீடு

பிள்ளையாருக்கு ரூ.316 கோடி காப்பீடு

1 mins read
dd44708f-ff45-4ab1-8e1c-417cf2b44d95
-

மும்பை: பிள்­ளை­யார் சதுர்த்­தியை முன்­னிட்டு மும்­பை­யின் பல பகு­தி­களில் 'மண்­டல்' என்ற பெய­ரில் பிர­மாண்ட விநா­ய­கர் சிலை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை அப்­ப­கு­தி­களில் வசிக்­கும் மக்­கள் வழி­பட்டு காணிக்கை வழங்­கு­வார்­கள்.

மும்­பை­யில் கடந்த 2 ஆண்­டு­க­ளாக கொரோனா பர­வல் கார­ண­மாக பிள்­ளை­யார் சதுர்த்தி கொண்­டாட்­டம் எளி­மை­யாக நடந்­தது.

இந்த ஆண்டு பிள்­ளை­யார் சதுர்த்தி திரு­விழா கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டப்­பட உள்­ளது.

இந்த நிலை­யில் மும்­பை­யின் பணக்­கார கண­பதி மண்­டல் எனக்­கூ­றப்­படும் கிங்ஸ் சர்க்­கி­ளில் உள்ள ஜி.எஸ்.பி. மண்­டல் ரூ.316.40 கோடிக்கு காப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஜி.எஸ்.பி. கண­பதி மண்­டல் இதற்கு முன் அதி­க­பட்­ச­மாக கடந்த 2016ஆம் ஆண்­டில் ரூ.300 கோடிக்கு காப்­பீடு செய்­யப்­பட்டு இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜி.எஸ்.பி. கண­பதி மண்­டல் சார்­பில் பிர­திஷ்டை செய்­யப்­படும் விநா­ய­கர் சிலை 66 கிலோ தங்க நகை­கள், 295 கிலோ வெள்ளி நகை­க­ளால் அலங்­கா­ரம் செய்­யப்­பட்டு இருக்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. வரு­கிற 31ஆம் தேதி பிர­திஷ்டை செய்­யப்­படும் ஜி.எஸ்.பி. விநா­ய­கர் சிலை, 5-வது நாளில் (செப்­டம்­பர் 4ஆம் தேதி) கரைக்­கப்­பட உள்­ளது.

முன்­ன­தாக வரு­கிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்­டல் கண­பதி சிலை­யின் அறி­முக நிகழ்ச்சி நடக்­கிறது.