கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையில் அடைத்த ஆசிரியர்கள்

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையில் அடைத்த ஆசிரியர்கள்

1 mins read
f0b5575c-003c-45aa-9630-0a524e02c309
-

புவ­னேஸ்வர்: கல்­விக் கட்­ட­ணம் செலுத்­த­வில்லை என்­ப­தால் ஆசி­ரி­யர் பலர் ஒன்றுசேர்ந்து மாண­வர்­களை வகுப்­ப­றை­யில் பல மணிநேரம் அடைத்து வைத்­த­தாக வெளி­யான தக­வல் ஒடிசா மாநி­லத்­தில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அம்­மா­நி­லத் தலை­ந­க­ரான புவ­னேஸ்­வ­ரில் இயங்கி வரும் ஒரு தனி­யார் பள்­ளி­யில் பயி­லும் 34 மாண­வர்­கள் பள்­ளிக் கட்­ட­ணம் செலுத்­த­வில்லை எனக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில் திங்­கட்­கி­ழமை அம்­மா­ண­வர்­களை ஒரு வகுப்பறை­யில் ஆசி­ரி­யர்­கள் அடைத்து வைத்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

சுமார் ஐந்து மணி நேரம் மாண­வர்­கள் அடைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். சாப்­பிட ஏதும் கொடுக்­கா­ம­லும் தண்­ணீர் குடிக்கவிடா­ம­லும் பல மாண­வர்­கள் தவித்த நிலை­யில், கழிப்­ப­றைக்­குச் செல்­ல­வும்­கூட அவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

பள்­ளிக் கட்­ட­ணம் செலுத்­தா­த­தால்­தான் இவ்­வாறு அடைத்து வைத்­தி­ருப்­ப­தாக அந்த மாண­வர்­களி­டம் பள்ளி நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. மேலும், இத்­த­க­வலை தங்­கள் பெற்­றோ­ரி­டம் தெரி­விக்­கு­மா­றும் அறி­வு­றுத்தி உள்­ளது.

ஆனால் மாண­வர்­கள் அதற்கு மறுத்­து­வி­டவே, வகுப்­ப­றைக்­குள் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மாண­வர்­கள் வீடு திரும்­பிய பின்­னர் இந்­தத் தக­வலை அறிந்த பெற்­றோர் கடுங்­கோ­ப­ம­டைந்து மறு­நாள் பள்ளி முன்பு ஒன்­று­கூடி, மறி­ய­லில் ஈடு­பட்­டதை அடுத்து இவ்­வி­வ­கா­ரம் வெளியே தெரி­ய­வந்­தது.

பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.