டெல்லியில் $834 மில்லியன் செலவில் காற்றுத் தூய்மைத் திட்டம்

டெல்லியில் $834 மில்லியன் செலவில் காற்றுத் தூய்மைத் திட்டம்

2 mins read
bc9b8363-47f0-4831-980f-12cc46e0c47f
காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கும் பொருட்டு, பெரும்பாலான பொதுப் போக்குவரத்து வாகனங்களை மின்வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: டெல்லி மாநில அர­சாங்­கம் அடுத்த மூன்று ஆண்­டு­களில் 600 மில்­லி­யன் டாலர் செலவு­செய்து புது­டெல்­லி­யின் பெரும்­பா­லான பொதுப்­ போக்­கு­வரத்து வாக­னங்­களை மின்­சார வாக­னங்­க­ளாக மாற்­றத் திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­தத் தொகை 834 மில்­லி­யன் வெள்­ளிக்­குச் சமம்.

நக­ரில் காற்­றின் தரத்தை மேம்­படுத்­து­வது இதன் நோக்­கம்.

உல­கின் ஆக மோச­மான காற்­றுத் தூய்­மைக்­கேடு நில­வும் நக­ரங்­களில் புது­டெல்­லி­யும் ஒன்று. அத­னால் காற்­றில் மாசின் அள­வைக் குறைக்­கும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளது டெல்லி மாநில அர­சாங்­கம்.

எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் 80 விழுக்­காட்­டுப் பேருந்­து­களை மின்­சா­ரத்­தில் இயங்­கும் வண்­ணம் மாற்­றி­ய­மைப்­பது தொடர்­பில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படு­கிறது.

கூடு­த­லான மின்­னூட்­டும் இடங்­களை அமைப்­ப­தும் 25 விழுக்­காட்டு மின்­தே­வையை சூரி­ய­சக்­தி­யில் இருந்து தயா­ரிப்­ப­தும் டெல்லி அர­சாங்­கத்­தின் திட்­டங்­கள்.

'நெட் ஸீரோ' எனப்­படும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைப் படிப்­படி­யாக அறவே துடைத்­தொ­ழிக்­கும் மத்­திய அர­சின் இலக்கை ஒட்டி டெல்லி அர­சாங்­கம் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

வருங்­கா­லத்­தில் இதற்­கான நிதி ஆத­ர­வைப் பெறு­வது மிக­வும் முக்­கி­யம் என்று டெல்லி அர­சின் கலந்­து­ரை­யா­டல், மேம்­பாட்­டுக் குழுத் துணைத் தலை­வர் ஜேஸ்­மின் ஷா கூறி­னார். 'கிரீன் பாண்ட்ஸ்' எனப்­படும் சுற்­றுச்­சூ­ழல் மேம்­பாடு தொடர்­பான திட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிதி ஆத­ரவு, அனைத்­து­லக நிதி ஆத­ரவு போன்­ற­வற்றை அவர் சுட்­டி­னார்.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த நேர்­கா­ண­லில் ஜேஸ்­மின் ஷா இவ்­வாறு குறிப்­பிட்­டார். மாநில அர­சாங்­கம் அதன் பசுமை முயற்­சி­க­ளுக்கு சொந்த நிதியை மட்­டுமே தற்­போது பயன்­படுத்தி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

கடந்த ஈராண்­டில் டெல்­லி­யில் பதிவு செய்­யப்­பட்ட வாக­னங்­களில் 12 விழுக்­காடு மின்­சார வாக­னங்­கள். இவற்­றுக்­காக நக­ரின் 2,500 இடங்­களில் மின்­னூட்ட வச­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தியா முழு­வ­தும் கணக்­கிட்­டால் இது ஆக அதிக எண்­ணிக்கை என்­றார் அவர். காற்­றின் தரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், டெல்­லி­யில் அனல் மின்­நி­லை­யங்­கள் அனைத்­தும் மூடப்­பட்­ட­தை­யும் ஜேஸ்மின் ஷா சுட்­டி­னார்.

உல­க­ள­வில் காற்­றுத் தூய்­மைக்­கேடு மோச­மாக உள்ள தலை­ந­க­ரங்­க­ளின் பட்­டி­ய­லில் புது­டெல்லி முன்­னணி வகிப்­பது குறித்­துப் பல­ரும் கவலை தெரி­வித்­துள்­ள­னர். இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் 'நெட் ஸீரோ' நிலையை எட்ட இலக்கு கொண்டுள்ளது.