ஜார்க்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ தகுதியை நீக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஜார்க்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ தகுதியை நீக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை

1 mins read
bf9d1e3b-9740-4741-ad60-709e9f7651bc
-

ராஞ்சி: ஜார்க்­கண்ட் மாநில முதல்­வர் ஹேமந்த் சோர­னின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தகு­தியை நீக்­கும்­படி ஆளு­ந­ரி­டம் தேர்­தல் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

திரு ஹேமந்த் சோரன் சென்ற ஆண்டு தமது முதல்­வர் பத­வி­யைப் பயன்­ப­டுத்தி நிலக்­க­ரிச் சுரங்க உரி­மம் பெற்­ற­தா­கக் குறை­கூ­றப்­படு­கிறது. அவர் சட்­டத்­துக்­குப் புறம்­பா­கச் செயல்­பட்­ட­தா­கத் தேர்­தல் ஆணை­யத்­தி­டம் பார­திய ஜனதா கட்சி புகார்­செய்­தது.

விசா­ர­ணை­யில் முதல்­வர் சுரங்க ஒதுக்­கீடு பெற்­றது உறு­தி­யா­ன­து­டன் 100 கோடி ரூபாய் மோசடி நடை­பெற்­ற­தா­க­வும் தெரி­ய­வந்­தது. இந்த முறை­கேடு தொடர்­பான புகா­ரில் ஹேமந்த் சோரனை தகு­தி­நீக்­கம் செய்­வது குறித்து தேர்­தல் ஆணை­யத்­தின் கருத்தை ஜார்க்­கண்ட் மாநில ஆளு­நர் கேட்­டி­ருந்­தார். இந்­நி­லை­யில் ஆணை­யத்­தின் பரிந்­துரை வெளி­யாகி உள்­ளது.

முன்­ன­தாக, முதல்­வ­ரின் உத­வி­யா­ளர் பிரேம் பிர­காஷ் வீட்­டில் மத்­திய அம­லாக்­கத்­துறை நடத்­திய சோத­னை­யில் இரண்டு ஏகே 47 துப்­பாக்­கி­களும் 60 தோட்­டக்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. விசா­ர­ணை­யில் ராஞ்சி காவல்­துறை ஊழி­யர்­கள் இரு­வ­ரின் அலட்­சி­யப் போக்­கால் அவை அங்­கி­ருந்­த­தா­கத் தெரிந்­தது. இரு­வ­ரும் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.