திருநங்கைகளுக்கு விரைவில் சுகாதாரக் காப்பீட்டு அட்டை

திருநங்கைகளுக்கு விரைவில் சுகாதாரக் காப்பீட்டு அட்டை

1 mins read
f6b1c074-0851-4122-9b11-375cb275a103
-

புது­டெல்லி: மத்­திய அரசு திரு­நங்­கை­க­ளுக்கு விரை­வில் சுகா­தா­ரக் காப்­பீட்டு அட்­டையை அறி­மு­கம் செய்­ய­வி­ருக்­கிறது.

இதற்­கான புரிந்­து­ணர்­வுக் குறிப்பு, கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது. திரு­நங்­கை­கள் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் மத்­திய சமூ­க­நீதி, அதி­கா­ர­ம­ளித்­தல் துறை­யும் தேசி­யச் சுகா­தார ஆணை­ய­மும் இணைந்து இந்த ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

இந்­தக் காப்­பீட்­டுத் திட்­டத்­தின்­கீழ் பயன்­பெ­று­வ­தற்கு, மத்­திய அர­சாங்­கத்­தால் அறி­விக்­கப்­பட்ட திரு­நங்கை சான்­றி­தழை வைத்­தி­ருக்க வேண்­டும்.

அடுத்த மாதம் இந்­தச் சுகா­தா­ரக் காப்­பீட்­டுத் திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது 'ஆயுஷ்­மான் பாரத் டிஜி சுகா­தா­ரக் காப்­பீட்டு அட்டை' என்று அழைக்­கப்­படும்.

இதன்­கீழ், ஒவ்­வொரு திரு­நங்­கைக்­கும் மருத்­து­வக் காப்­பீ­டாக ஐந்து லட்­சம் ரூபாய் வரை நிதி­ய­ளிக்­கப்­படும். இந்த அட்­டையை வைத்­துக் கொண்டு தேர்வு செய்­யப்­பட்ட மருத்­து­வ­ம­னை­களில் திரு­நங்­கை­கள் இல­வச சிகிச்சை பெற முடி­யும்.