சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

1 mins read
8f1020c1-7b1a-482d-a721-b83cd8f21876
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் பெங்களூரு நோக்கிச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. படம்: இந்திய ஊடகம் -

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் தும­குரு வட்­டா­ரத்­தில் நேற்று தேசிய நெடுஞ்­சா­லை­யில் சென்று கொண்­டி­ருந்த லாரி மீது 'டெம்போ' எனப்­படும் சிறிய ரக வாக­னம் மோதி­யது. இதில் மூன்று குழந்­தை­கள் உட்­பட ஒன்­பது பேர் உயி­ரி­ழந்­த­னர்; 15 பேர் காய­ம­டைந்தனர்.

உயி­ரி­ழந்­த­வர்­கள் அனை­வ­ரும் கூலித் தொழி­லா­ளர்­கள் என்­றும் அவர்­கள் பெங்­க­ளூரு நோக்கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது விபத்து ஏற்­பட்­ட­தா­க­வும் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

பிர­த­மர் நரேந்­திர மோடி உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துள்­ளார். மாண்­டோர் குடும்­பத்­துக்கு, பிர­த­ம­ரின் தேசிய நிவா­ரண நிதி­யி­லி­ருந்து தலா ரூ.2 லட்­சம் நிவா­ர­ணம் வழங்­க­வும் உத்­த­ர­விட்­டுள்­ளார். விபத்­தில் காய­ம­டைந்­தோர் அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். அவர்­க­ளுக்கு தலா 50,000 ரூபாய் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்ளது.