'என்னதான் சோதனை நடத்தினாலும் சிபிஐ-க்கு எதுவும் கிடைக்காது'

'என்னதான் சோதனை நடத்தினாலும் சிபிஐ-க்கு எதுவும் கிடைக்காது'

1 mins read
4270e9ba-d41b-4615-924a-2fd82399733a
-

புது­டெல்லி: டெல்லி அரசை நிலை­கு­லை­யச் செய்ய என்­ன­தான் சோதனை மேற்­கொண்­டா­லும் குற்­றச்­சாட்­டுக்கு ஆத­ர­வாக எவ்­விதத் தட­ய­மும் சிக்­கப்­போ­வ­தில்லை என்று டெல்லி துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா கூறி­யுள்­ளார். மது­பா­னக் கடை உரி­மம் வழங்­கி­ய­தில் முறை­கேடு நடந்­த­தாக துணை முதல்­வர் சிசோ­டி­யா­வின் வீடு உள்­ளிட்ட 31 இடங்­களில் சிபிஐ கடந்த 19ஆம் தேதி சோதனை மேற்­கொண்­ட­து. இந்­தச் சோத­னை­யில் முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி­யுள்­ளது என்று சிசோ­டியா உள்­ளிட்ட 15 பேரின் மீது சிபிஐ வழக்­குப் பதிவு செய்­துள்­ளது. ஆனால், சிசோ­டியா தன் மீதான குற்­றச்­சாட்­டு­களை மறுத்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், டெல்லி சட்­டப்­பே­ர­வை­யின் சிறப்­புக் கூட்­டத்­தில் பேசிய மணிஷ் சிசோ­டியா, "கலால் கொள்­கையை அமல்­ப­டுத்­தி­யது தொடர்­பாக என் மீது பதிவுசெய்­யப்­பட்ட முதல் தக­வல் அறிக்கை போலி­யா­னது. எனது வீட்­டின் ஒவ்­வொரு மூலை­யி­லும் அதி­கா­ரி­கள் 14 மணி நேரம் சோதனை செய்­த­னர். ஆனால் எது­வும் கிடைக்­க­வில்லை," என்­றார் சிசோ­டியா. வேறொன்­று­மில்லை. பாஜக விருப்­பப்­படி சிபிஐ செயல்­ப­டு­கிறது. ஆம் ஆத்மி அர­சு­க­ளின் குறிப்­பாக கல்­வித் துறை­யின் செயல்­பா­டு­க­ளால் பாஜக கலக்­கம் அடைந்­துள்­ளது," என்­றார் சிசோ­டியா.