சபர்மதியில் பிரம்மாண்ட நடைபாலம்

சபர்மதியில் பிரம்மாண்ட நடைபாலம்

2 mins read
c420e700-3dca-4cbd-ad89-12eb2db830a6
சபர்மதி ஆற்றின் இரு கரையையும் இணைக்கும் நடை பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். படம்: ஏஎஃப்பி -

அகமதாபாத்: குஜ­ராத்­தில் உள்ள சபர்­மதி ஆற்­றின் இரு கரை­களை இணைக்­கும் வகை­யில் பிரம் மாண்ட­மாக கட்­டப்­பட்­டுள்ள நடை பாலத்தை பிர­த­மர் மோடி திறந்து வைத்­தார்.

இரண்டு நாள் பய­ணம் மேற் கொண்டு குஜ­ராத் மாநி­லத்­துக்கு வந்த பிர­த­மர், அங்கு நடை­பெற்ற பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றார்.

்நாட்­டின் 75வது சுதந்­திர தினத்­தை­யொட்டி, அகமதா­பாத்­தில் சபர்­மதி ஆற்­றங்­க­ரை­யில் நடந்த காதி விழா­வில் அவர் கலந்து கொண்­டார். இந்­நி­கழ்ச்­சி­யில், 7,500 பெண்­கள் ராட்­டையைச் சுழற்றி நூல் நுாற்றது புதிய சாத­னை­யாகப் பதி­ வா­கி­யுள்­ளது.

பிர­த­மர் மோடி­யும் இந்­நி­கழ்­வில் பங்­கேற்று ராட்­டை­யில் நூல் நூற்றார்.

இதை­ய­டுத்து அகமதாபாத் மாநக­ராட்­சி­யால் கட்­டப்­பட்­டுள்ள, 984 அடி நீள­மும் 45 அடி அக­ல­மும் உள்ள நடைபாலத்தை அவர் திறந்து வைத்­தார்.

எல்.இ.டி. விளக்­கு­களுடன் புதிய நடைபாலம் ஜொலித்தது. மக்கள் இயற்கையை ரசித்துக்கொண்டே இதில் நடந்து செல்லலாம். சைக்­கி­ளில் செல்­லும் வச­தி­யும் உள்­ளது. பாலத்­தின் நடுவே பூங்கா அமைக் கப்­பட்­டுள்­ளது. சுற்­றுலா பய­ணி­களை ஈர்க்கும் வகையிலும் நடை பாதை வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ளது.

இந்தப் பாலத்­துக்கு முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பாய் நினை­வாக, 'அடல்' என பெய­ரி­டப்­பட்டு உள்ளது.

மொத்­தம், 26 லட்­சம் கிலோ இரும்பு குழாய்­க­ளால் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த இரும்பு பாலத்­தின் கூரை­யில், பல வண்­ணத் துணி­கள் மேற்­கூ­ரை­யாக அமைக்­கப்­பட்டு உள்­ளன. சபர்­ம­தி­யின் மேற்குப் பகுதி­யில் உள்ள மலர் பூங்­கா­வை­யும் கிழக்குப் பகு­தி­யில் அமைக்­கப்­பட உள்ள கலை மற்­றும் கலா­சார மையத்­தை­யும் இணைக்­கும் வகை­யில் இந்த நடைபாலம் அமைந்­துள்­ளது.

பாலத்தை திறந்துவைத்துப் பேசிய பிர­த­மர் மோடி, "கடந்த 1996ல் குஜ­ராத்­தின் காந்­தி­ந­கர் லோக்­சபா தொகு­தி­யில் முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பாய் மிகப்பெரிய சாதனையுடன் வெற்றி பெற்­றார். இந்த மாநி­லத்தை நேசித்த அவ­ருக்கு குஜ­ராத் மக்­க­ளின் சிறந்த மரி­யா­தை­யாக இந்தப் பாலம் அமைந்து உள்­ளது," என்­றார்.

குஜ­ராத் பய­ணத்­தின்­போது தனது தாயார் ஹீரா­பென்­னை­யும் சந்­தித்து பிர­த­மர் மோடி ஆசி பெற்­றார்.

இதற்­கி­டையே நேற்று மாதாந்திர 'மன் கி பாத்' எனும் வானொலி நிகழ்ச்­சி­யில் நேற்று உரை­யாற்­றிய அவர், நாட்­டில் ஊட்­டச்­சத்து பற்றாக்கு­றையை நீக்­கும் முயற்­சி­களில் மக்­கள் அனை­வ­ரும் ஈடு­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டார்.

நாட்­டின் சுதந்­திர தினத்­தின்­போது 'ஹர்­கர் திரங்கா' எனப்­படும் வீடு­தோ­றும் மூவர்ண கொடி ஏற்றும் நிகழ்ச்­சியை புது­மை­யான முறை­யில் செயல்­ப­டுத்­தி­ய­தற்­காக தனது பாராட்­டு­களை அவர் மக்களுக்கு தெரி­வித்துக்கொண்­டார்.