'நீட்' தேர்வின்போது உள்ளாடை அகற்றப்பட்ட சம்பவம்; மறுதேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி

'நீட்' தேர்வின்போது உள்ளாடை அகற்றப்பட்ட சம்பவம்; மறுதேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி

2 mins read
8f84d37c-468b-4ab5-aba3-5b489e5b3016
-

புது­டெல்லி: நீட் தேர்வு எழுத வந்த மாண­வி­க­ளி­டம் சோத­னைக்­காக உள்­ளாடையை அகற்ற வைக்­கப்­பட்ட சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர் ­க­ளுக்கு மறு­தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளி யாகியுள்ளது.

நாடு முழு­வ­தும் கடந்த மாதம் 17ஆம் தேதி 'நீட்' எனும் மருத்­துவப் படிப்­புக்­கான நுழை­வுத் தேர்வு நடை­பெற்­றது.

இந்­தத் தேர்வு, கேரள மாநி­லம், கொல்­லத்­தில் உள்ள ஆயூர் மார்த்­தோமா தக­வல் தொழில்­நுட்ப கல்வி நிறு­வ­னத்­தி­லும் நடை­பெற்­றது.

அப்­போது அங்கு 'நீட்' தேர்வு எழுத வந்த மாண­வி­களில் ஒரு­வரை 'மெட்­டல் டிடெக்­டர்' கொண்டு சோதனை நடத்­தி­ய­போது 'பீப்' ஒலி எழும்­பி­யது.

இத­னால், சந்­தே­கம் அடைந்த பெண் பாது­காப்பு அதி­கா­ரி­கள், தேர்வு எழுத வேண்­டு­மா­னால், உள்­ளா­டையை அகற்­றி­யாக வேண்­டும் என மாண­வி­யி­டம் கூறி­னர். உள்­ளா­டை­யில் இருந்த உலோ­கக் கொக்­கி­யால் 'மெட்­டல் டிடெக்­டர்' சத்­தம் போட்­டி­ருக்­க­லாம் என நம்பப் படுகிறது. செய்­வ­த­றி­யாத மாணவி களின் உள்­ளா­டையை அகற்றிய நிலை­யில் மூன்று மணி நேரம் மிகுந்த மன உளைச்­ச­லு­டன் 'நீட்' தேர்வை எழுதி முடித்தனர்.

இது­பற்­றிய தக­வல்­களை அந்த மாண­வி­யின் தந்தை வெளி­யிட்­டார். தன் மக­ளுக்கு மட்­டுமல்லாமல் பல மாண­வி­க­ளுக்­கும் இது­போன்று நடந்­துள்­ள­தாக அவர் வேத­னை­ தெரி­வித்­தார்.

இது நாடு முழு­வ­தும் பரவி பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த விவ­கா­ரத்­தில் மத்­திய அரசு தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மத்­திய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தா­னுக்கு கேரள மாநில உயர் கல்­வித்­துறை அமைச்­சர் டாக்­டர் ஆர்.பிந்து கடி­தம் எழு­தி­னார்.

மேலும், பாதிக்­கப்­பட்ட மாண­வி­யின் தந்தை அளித்த புகா­ரின்­பே­ரில் கொட்­டா­ரக்­கரை காவல்­துறை வழக்­குப்பதிந்து, ஐந்து பெண்­கள் உள்­பட ஏழு பேரைக் கைது செய்தது.

ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம், உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தி­லும் இது­போன்ற சம்­ப­வங்­கள் நடந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே 'நீட்' தேர்வை நடத்­தும் 'என்.டி.ஏ' எனும் தேசிய தேர்வு முகமை, ஒரு குழு அமைத்து இந்த விவ­கா­ரத்தை விசா­ரித்­தது. இதையடுத்து தற்­போது பாதிப்­புக்கு ஆளான மாணவி­ க­ளுக்கு மறுதேர்வு நடத்த முடி­வாகி உள்­ள­தாகத் தக­வல்­கள் தெரிகிறது.