குலாம் நபி ஆசாத்: கட்சியிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தினார்கள்

குலாம் நபி ஆசாத்: கட்சியிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தினார்கள்

2 mins read
8bfbd67d-d695-449d-b5ed-50631d4b555c
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து வெளி­யே­றும்­படி தாம் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கத் திரு குலாம் நபி ஆசாத் (படம்) கூறி­யிருக்­கி­றார்.

"காங்­கி­ரஸ் தலைமை குறித்து ஜி23 கடி­தம் எழு­தப்­பட்­ட­தில் இருந்தே கட்சி மேலி­டத்­துக்­கும் எனக்­கும் இடையே பிரச்­சினை நில­வி­யது. யாரும் அவர்­க­ளுக்­குக் கடி­தம் எழு­து­வ­தையோ கேள்வி ­எ­ழுப்­பு­வ­தையோ அவர்­கள் எப்­போ­தும் விரும்­பு­வது இல்லை," என்­றார் அவர்.

இது­வரை பல­முறை காங்­கி­ரஸ் கூட்­டங்­கள் நடந்­த­போ­தும் ஒரு முடி­வு­கூட எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தைச் சுட்­டிய திரு ஆசாத், காங்­கி­ரஸ் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற கட்­சி­யி­னர் தம்­மைக் கட்­டா­யப்­படுத்தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

மேலும், "காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த என் நண்­பர்­கள் சிலரே என்­னைப் பற்­றிக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கி­றார்­கள். காங்­கி­ர­சில் விரோ­தி­கள் முன்­னே­றிக்கொண்­டி­ருக்­கி­றார்­கள்," என்று அவர் வருத்­தம் தெரி­வித்­தார்.

பார­திய ஜனதா கட்­சி­யில் அவர் இணை­யக்­கூ­டும் என்ற ஊகங்­கள் எழுந்த நிலை­யில் தாம் அவ்­வாறு செய்­யப்­போ­வ­தில்லை என்­றும் இன்­னும் 10 நாளில் புதிய கட்சி ஒன்­றைத் தொடங்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, காங்­கி­ரஸ் கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பினா் உள்­ளிட்ட அனைத்­துப் பொறுப்­பு­களில் இருந்­தும் வில­கிய திரு குலாம் நபி ஆசாத், இதன் தொடர்­பில் கட்­சித் தலைவா் சோனியா காந்­திக்கு எழு­திய கடி­தத்­தில், கட்­சி­யின் கட்­ட­மைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்­து­விட்­ட­தாக குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

அவ­ரைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்­மீர் மாநி­லத்­தைச் சேர்ந்த மேலும் எட்டு காங்­கி­ரஸ் தலை­வர்­கள் கட்­சியை விட்டு வில­கி­விட்­ட­னர். இவர்­களில் முன்­னாள் அமைச்­சர்­களும் அடங்­கு­வர். ஜம்மு-காஷ்­மீ­ரில் சட்­ட­மன்­றத் தேர்­தல் அறி­விக்­கப்­பட இருக்­கும் வேளை­யில், திரு ஆசாத்­துக்­கான ஆத­ரவை விரை­வில் அறி­விப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.