புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் (படம்), சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்.
இதன் மூலம் தங்கள் கட்சியில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட கட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
பாரதிய ஜனதாக் கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகக் கூறப்படும் நிலையில் இந்த வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருக்கிறது.
பாஜகவின் 'ஆப்பரேஷன் லோட்டஸ்' தோல்வியுற்றதாகக் கூறிய கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரானதாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க முயல்வது ஊழல் நடவடிக்கை என்பதைச் சுட்டினார்.

