தேசியக் கொடியை வாங்க மறுத்த அமித்ஷா மகன்

தேசியக் கொடியை வாங்க மறுத்த அமித்ஷா மகன்

1 mins read
c771dc11-1fd1-42d1-a81d-8755b78a8ed8
-

புது­டெல்லி: ஆசி­யக் கிண்­ணக் கிரிக்­கெட் போட்டி துபா­யில் நடை­பெற்று வரு­கிறது. இதில் நேற்று முன்­தி­னம் பாகிஸ்­தான் அணி­யு­டன் பொரு­திய இந்­திய அணி, 5 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வாகை சூடி­யது.

இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யச் செய­லா­ளர் ஜெய்ஷா இந்­தப் போட்­டியை நேரில் ரசித்­தார். இந்­தியா வெற்­றி­பெற்­ற­தும் அவர் கைதட்டி ஆர­வா­ரம் செய்­தார்.

அவ்­வே­ளை­யில் ஜெய்­ஷா­வின் கையில் தேசி­யக் கொடி­யைக் கொடுக்க முனைந்­தார் ஆட­வர் ஒரு­வர். ஆனால் ஜெய்ஷா தேசி­யக் கொடியை வாங்க மறுத்­து­விட்­டார். மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வின் மக­னான ஜெய்ஷா, வெற்­றிக் கொண்­டாட்ட நேரத்­தில் தேசி­யக் கொடியை வாங்க மறுத்­தது சர்ச்­சையைக் கிளப்பியுள்ளது.