மாணவர்கள் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி பார்க்கத் தடை

மாணவர்கள் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி பார்க்கத் தடை

1 mins read
3fec7433-139f-4890-858e-acf1e64e1d96
-

ஸ்ரீந­கர்: துபா­யில் தற்­போது இந்­தியா, பாகிஸ்­தான், இலங்கை உள்­ளிட்ட நாடு­கள் கலந்­து­கொள்­ளும் ஆசி­யக் கிண்­ணக் கிரிக்­கெட் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இவ்­வே­ளை­யில், காஷ்­மீர் தலை­ந­கர் ஸ்ரீந­க­ரில் உள்ள தேசி­யத் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் (என்­ஐடி), விடுதி அறை­யில் மாண­வர்­கள் தொலைக்­காட்­சி­யில் கிரிக்­கெட் போட்­டி­க­ளைப் பார்க்­கத் தடை விதித்­துள்­ளது. மீறி­னால் 5,000 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிரிக்­கெட் போட்டி தொடர்­பான கருத்­து­க­ளைச் சமூக ஊட­கங்­களில் பதி­வி­ட­வும் கல்­லூரி நிர்­வா­கம் தடை விதித்­துள்­ளது. மீறு­வோ­ருக்கு 5,000 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும். போட்­டி­கள் நடக்­கும் நேரத்­தில் மாண­வர்­கள் அவ­ர­வர் அறை­க­ளி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கிரிக்­கெட்டை விளை­யாட்­டாக மட்­டுமே கரு­த­வேண்­டும் என்­றும் அதன் தொடர்­பில் ஒழுங்­கீ­னச் செயல்­களில் மாண­வர்­கள் ஈடு­ப­டக்­கூ­டாது என்­றும் என்­ஐடி நிர்­வா­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இந்த உத்­த­ர­வு­களை மீறும் மாண­வர்­கள்­ விடு­தி­யில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகளைப் பார்க்க நாடெங்கும் இளையர்கள் ஆர்வம்காட்டும் வேளையில் இந்த உத்தரவு வெளியானது.