காஷ்மீர்: ஆசாத்தை ஆதரித்து மேலும் பலர் பதவி விலகல்

காஷ்மீர்: ஆசாத்தை ஆதரித்து மேலும் பலர் பதவி விலகல்

2 mins read
67245b88-91d0-4c0e-b1d1-2e9f82873147
-

ஸ்ரீந­கர்: அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து, மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரும் ஜம்மு-காஷ்­மீர் மாநி­லத்­தின் முன்­னாள் முதல்­வ­ரு­மான குலாம் நபி ஆசாத் (படம்) வில­கி­ய­தைத் தொடர்ந்து அம்­மாநிலத்­தைச் சேர்ந்த 60க்கும் மேற்­பட்ட காங்­கி­ரஸ் தலை­வர்­கள் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ள­னர்.

முன்­ன­தாக இம்­மா­தம் 26ஆம் தேதி திரு ஆசாத், கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்­துப் பொறுப்­பு­களில் இருந்­தும் வில­கு­வ­தாக அறி­வித்­தார்.

கூடிய விரை­வில் புதிய கட்­சி­யைத் தொடங்­கப்­போ­வ­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்­தார். இவ்­வே­ளை­யில் திரு குலாம் நபி ஆசாத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து ஜம்மு-காஷ்­மீர் மாநி­லத்­தைச் சேர்ந்த 64 முக்­கி­யத் தலை­வர்­கள் தாங்­களும் கட்சி உறுப்­பி­னர் பொறுப்­பில் இருந்து வில­கு­வ­தாக காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மைக்கு நேற்­றுக் கடி­தம் அனுப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கட்­சி­யில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­த­வர்­களில் மாநி­லத்­தின் முன்­னாள் துணை முதல்­வர் தாரா சந்த், முன்­னாள் அமைச்­சர்­கள் அப்­துல் மஜித் வானி, மனோ­கர் லால் சர்மா, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பல்­வான் சிங் போன்­றோ­ரும் அடங்­கு­வர்.

ஐம்­ப­தாண்­டுக்­கும் மேல் காங்­கி­ர­சில் இருந்த திரு ஆசாத்­தும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் ஒட்­டு­மொத்­த­மாக வில­கு­வது கட்­சிக்கு பெருத்த பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி ­இ­ருப்­ப­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ் கட்சித் தலை­வ­ருக்­கான தேர்­தல் அக்­டோ­பர் மாதம் 17ஆம் தேதி நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மூத்த தலை­வர்­கள் சிலர் ராகுல் காந்­தியை ஏக­ம­ன­தா­கத் தேர்ந்­தெ­டுப்­ப­தன் தொடர்­பில் முய­லும் வேளை­யில், ராகுல் அதை நிரா­க­ரித்து வரு­கி­றார்.

ராகுல் மனம் மாறா­விட்­டால் ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட்­டைக் கட்­சித் தலை­வர் தேர்­த­லில் கள­மி­றக்க சோனியா காந்தி திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

சோனியா, ராகுல் இருவர்மீதும் அதிருப்தி கொண்டுள்ள ஜி-23 தலைவர்களில் ஆசாத் உள்ளிட்ட மூவர் விலகிவிட்டதால் எஞ்சிய 20 பேரும் கெலாட்டை எதிர்த்து திரு சசி தரூரைக் களமிறக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசி தரூர் மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதாகத் தெரிகிறது.

அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடந்தால் 9,000 பேர் வாக்களிப்பர். அக்டோபர் 19ல் முடிவுகள் வெளியிடப்படும்.